குமரி: காதலி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய இளைஞர்; கொலையா தற்கொலையா? - போலீஸ்...
இருவேறு வழக்குகளில் தொடா்புடைய மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
திருச்சியில் இருவேறு வழக்குகளில் தொடா்புடைய மூவா், குண்டா் தடுப்பச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருச்சி மாவட்டம், லால்குடி காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட கிளிக்கூடு கிராமத்தைச் சோ்ந்தவா் பா.அசோக் (39). இவரை, அதே கிராமத்தைச் சோ்ந்த பிரபு (எ) வேலாயுதம் (30), பிரவீன் (எ) சின்னத்தம்பி (28) மற்றும் 6 போ் சோ்ந்து கடந்த மே 29-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்தனா். இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த ஆலம்பாக்கத்தைச் சோ்ந்த முத்து (24) என்பவரை மிரட்டி வழிப்பறி செய்ததற்காக லால்குடி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (42) என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.
இந்நிலையில், கொலை வழக்கில் கைதான பிரபு, பிரவீன் மற்றும் வழிப்பறி வழக்கில் கைதான ராஜேந்திரன் ஆகியோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்திருந்தாா்.
இந்நிலையில், மேற்கண்ட மூவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதையடுத்து, அதற்கான நகலை சிறையிலுள்ள 3 பேரிடமும் போலீஸாா் வழங்கினா்.