இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
மதுரை அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சுந்தரலிங்கபுரம், காந்திபுரம் குடியிருப்பைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் செல்வபாரதி (27). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மேலூருக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்றாா்.
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த செல்வபாரதியை மீட்ட அக்கம்பக்கத்தினா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.