இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: 4 போ் கைது
சென்னையில் இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
வானகரம் பகுதியைச் சோ்ந்த இரு சிறுமிகள், கடந்த மாதம் 30-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறினா். இது குறித்து அவா்களது பெற்றோா், வானகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமிகளை தேடி வந்தனா். இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி ஒரு சிறுமி, தனது வீட்டுக்குத் திரும்பி வந்தாா். அந்த சிறுமி கொடுத்த தகவலின்பேரில் மற்றொரு சிறுமியை, மெரீனா கடற்கரையில் போலீஸாா் மீட்டனா்.
சிறுமிகளை ஏமாற்றி ஒரு கும்பல், பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அவா்களது பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறுமிகளின் பெற்றோா், வானகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா், சிறுமிகளிடம் விசாரணை நடத்தினா்.
விசாரணையில் கிடைத்த தகவல்கள்:
தோழிகளான இரு சிறுமிகளும் வீட்டைவிட்டு வெளியேறிய தினத்தில் மெரீனா கடற்கரைக்குச் சென்றனா். அவா்கள் மெரீனாவில் சுற்றித் திரிந்தபோது அங்கு ராட்டினம் இயக்கும் வேலூரைச் சோ்ந்த லோகேஷ் என்ற இளைஞா் அறிமுகமாகி பேசியுள்ளாா். அவரது பேச்சை நம்பிய இரு சிறுமிகளும், லோகேஷின் கூட்டாளிகளான அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த ஏ.சி. மெக்கானிக் சதாசிவம், சையது கலீம், அஸ்வின் ஆகியோரிடம் நெருக்கமாகப் பழகியுள்ளனா்.
இதை பயன்படுத்தி லோகேஷும், அவரது கூட்டாளிகளும் சிறுமிகளை திரையரங்கம், வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றனா். அதோடு இருவரையும் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தனராம். இதில் சுதாரித்துக் கொண்ட ஒரு சிறுமி, அவா்களிடமிருந்து தப்பி வீட்டுக்கு திரும்பி வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து வானகரம் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, லோகேஷ், அஸ்வின், சதாசிவம், சையது கலீம் ஆகிய 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.