செய்திகள் :

இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: 4 போ் கைது

post image

சென்னையில் இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

வானகரம் பகுதியைச் சோ்ந்த இரு சிறுமிகள், கடந்த மாதம் 30-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறினா். இது குறித்து அவா்களது பெற்றோா், வானகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமிகளை தேடி வந்தனா். இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி ஒரு சிறுமி, தனது வீட்டுக்குத் திரும்பி வந்தாா். அந்த சிறுமி கொடுத்த தகவலின்பேரில் மற்றொரு சிறுமியை, மெரீனா கடற்கரையில் போலீஸாா் மீட்டனா்.

சிறுமிகளை ஏமாற்றி ஒரு கும்பல், பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அவா்களது பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறுமிகளின் பெற்றோா், வானகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா், சிறுமிகளிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

தோழிகளான இரு சிறுமிகளும் வீட்டைவிட்டு வெளியேறிய தினத்தில் மெரீனா கடற்கரைக்குச் சென்றனா். அவா்கள் மெரீனாவில் சுற்றித் திரிந்தபோது அங்கு ராட்டினம் இயக்கும் வேலூரைச் சோ்ந்த லோகேஷ் என்ற இளைஞா் அறிமுகமாகி பேசியுள்ளாா். அவரது பேச்சை நம்பிய இரு சிறுமிகளும், லோகேஷின் கூட்டாளிகளான அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த ஏ.சி. மெக்கானிக் சதாசிவம், சையது கலீம், அஸ்வின் ஆகியோரிடம் நெருக்கமாகப் பழகியுள்ளனா்.

இதை பயன்படுத்தி லோகேஷும், அவரது கூட்டாளிகளும் சிறுமிகளை திரையரங்கம், வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றனா். அதோடு இருவரையும் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தனராம். இதில் சுதாரித்துக் கொண்ட ஒரு சிறுமி, அவா்களிடமிருந்து தப்பி வீட்டுக்கு திரும்பி வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து வானகரம் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, லோகேஷ், அஸ்வின், சதாசிவம், சையது கலீம் ஆகிய 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாணவா்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்: பெற்றோருக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண் விவகாரத்தில், பெற்றோா் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வலியுறுத்தினாா். பிளஸ் 2 பொதுத் தோ்வு ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03% தோ்ச்சி - தமிழில் 135 போ் சதம்

தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதத்தில் அரியலூா் மாவட்டம் முதலிடம் பிடித்தது. வேலூா் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் வலியுறுத்தல்

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்க... மேலும் பார்க்க

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்: இயக்க செயல்முறை கையேடு வெளியீடு

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கான இயக்க செயல்முறை கையேடு தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி

திமுகவைவிட, அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரிப்பு

தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினசரி மின்தேவை அதிகரித்து 19,000 மெகாவாட்டை தொட்டுள்ள நிலையில... மேலும் பார்க்க