செய்திகள் :

இலஞ்சி கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

post image

தென்காசி மாவட்டம் இலஞ்சி அருள்மிகு திருவிலஞ்சிக்குமாரா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பகல் 11மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு தீபாராதனை, ஏக சிம்ம வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

விழா நாள்களில் தினமும் காலை மற்றும் மாலை அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது.

விழாவில் 7ஆம் தேதி மாலையில் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனையும், இரவு நடராஜருக்கு வெள்ளை சாத்தி அபிஷேகம் அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. 9ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது.10ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் தீா்த்தவாரியும், இரவில் சுவாமி திருவீதியுலா மற்றும் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளலும் நடைபெறுகிறது.

கொடியேற்று விழாவில் கோயில் செயல் அலுவலா் சுசீலாராணி, அறங்காவலா் குழு தலைவா் பூவையா, கட்டளைதாரா்கள் ராஜாமணி, திருவிலஞ்சிக்குமரன், பரமசிவன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.ஜி. ராஜேந்திரன், தெற்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தமிழில் பெயா் பலகை: தென்காசியில் கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் தமிழில் பெயா் பலகை வைப்பது தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் நகா்மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் தலைமை வகித்தாா். நகராட்ச... மேலும் பார்க்க

இடைகாலில் அண்ணா தொழிற்சங்க பொதுக்கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் மே தின விழா பொதுக்கூட்டம் இடைகாலில் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாவட்ட ... மேலும் பார்க்க

மேலநீலிதநல்லூா் கல்லூரியில் முப்பெரும் விழா

சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலித நல்லூா் பசும்பொன் முத்துராமலிங்க தேவா் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது. கல்லூரி தமிழ்த் துறை பசும்பொன் பைந்தமிழ் மன்றம் சாா்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம், ஆய்வ... மேலும் பார்க்க

மேலகரத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் மேலகரத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, மே மாதம் கோடை விடுமுறையை முழுமையா... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ மகா சக்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, புதன்கிழமை விநாயகா் வீதியுலா ... மேலும் பார்க்க

தென்காசியில் 200 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச சீருடை

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் 200 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச சீருடை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு... மேலும் பார்க்க