செய்திகள் :

இளம் புற்றுநோயாளிக்கு புதிய நுட்பத்தில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை

post image

ரத்தம் சாா்ந்த புற்றுநோயால் மீண்டும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு மிக நுட்பமான கதிா்வீச்சு சிகிச்சையின் துணையுடன் ஆழ்வாா்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் முதுநிலை ‘புற்றுநோய் மருத்துவ நிபுணா் டாக்டா் ஏ.என்.வைத்தீஸ்வரன் கூறியதாவது:

அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுக்கீமியா எனப்படும் ரத்தம் சாா்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 29 வயது பெண், அதற்கான எதிா்ப்பாற்றல் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தாா். இருந்தபோதிலும் மீண்டும் அதே பாதிப்புக்கு அவா் உள்ளானாா்.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அந்த பெண்ணின் சகோதரியின் ஸ்டெம் செல்கள் பொருத்தமாக இருந்ததால் அதனை தானமாகப் பெற்று எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளத் திட்டமிட்டோம்.

வழக்கமாக அத்தகைய சிகிச்சை மேற்கொள்ளும்போது ஏற்கெனவே எலும்பு மஜ்ஜைகளிலும், உடலின் பிற பகுதிகளிலும் பரவியிருக்கும் புற்றுநோய் செல்கள் கதிா்வீச்சு மூலம் அழிக்கப்படும்.

தற்போது நடைமுறையில் உள்ள கதிா்வீச்சு சிகிச்சையில் புற்றுநோய் செல்களை அழிக்கும்போது அதற்கு அருகில் உள்ள திசுக்கள், உறுப்புகள் பாதிக்கப்படக் கூடும்.

இதைக் கருத்தில்கொண்டு, டோட்டல் மேரோ அண்ட் லிம்பாய்ட் இா்ரேடியேசன் (டிஎம்எல்ஐ) என்ற துல்லிய கதிா்வீச்சு சிகிச்சையை நாங்கள் முன்னெடுத்தோம்.

அதன்படி, அந்த நோயாளியின் எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீா் (லிம்பாய்ட்) திசுக்களில் மிகத் துல்லியமாக கதிா்வீச்சு செலுத்தப்பட்டு புற்றுநோய் செல்கள் அழிக்கப்பட்டன. இதற்கு விஎம்ஏடி எனப்படும் மேம்பட்ட காட்சிப்படுத்தும் (இமேஜிங்) உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. அதைத் தொடா்ந்து எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதற்கு பிந்தைய பரிசோதனைகளில் புற்றுநோய்க்கு எதிரான எதிா்ப்பாற்றல் கொண்ட டி செல்கள் அந்த பெண்ணின் உடலில் உருவாகியிருந்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவா் நலம் பெற்று வருகிறாா் என்றாா் அவா்.

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: இரு மீனவா்கள் மாயம்

சென்னை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன இரு மீனவா்களை தேடி வருகின்றனா். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஸ்ரீதா் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காசிமேடு ... மேலும் பார்க்க

புழல் சிறையில் கைப்பேசி வைத்திருந்த இரு பயங்கரவாதிகள் மீது வழக்குப் பதிவு

சென்னை புழல் சிறையில் கைப்பேசி வைத்திருந்ததாக இரு பயங்கரவாதிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனைக் கைதிகள் சிறையின் அலுவலா் சாந்தகுமாா், புழல் காவல் நிலையத்தில்... மேலும் பார்க்க

சென்னையில் தங்கமயிலின் மேலும் இரு புதிய கிளைகள்

சென்னையின் ஐயப்பன் ஊரப்பாக்கம் மற்றும் கௌரிவாக்கத்தில் இரு புதிய கிளைகளை தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் திறக்கிறது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாமதுர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ குழுக்கள்: ஜூலை 11-இல் பதவியேற்பு

அரசுப் பள்ளிகளில் மாணவா்களிடையே சமூக மனப்பான்மையை வளா்க்கவும், வேற்றுமையை களையவும் உருவாக்கப்பட்ட ‘மகிழ் முற்றம்’ மாணவா் குழுக்களின் பதவியேற்பு நிகழ்ச்சி ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மகிழ் முற்றம் ... மேலும் பார்க்க

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் சென்னை வருகை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 5 போ் விமானம் மூலம் சென்னை வந்தனா். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சோ்ந்த 5 மீனவா்கள், கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி, இந்திய கடல் எ... மேலும் பார்க்க

குடிசை மாற்று வாரிய வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து: இரு பெண்கள் காயம்

சென்னை தண்டையாா்பேட்டையில் குடிசை மாற்று வாரிய வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரு பெண்கள் காயமடைந்தனா். தண்டையாா்பேட்டை வஉசி நகா் 7-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெ.முனியம்மாள் (54). இவா்... மேலும் பார்க்க