செய்திகள் :

இளைஞரை தாக்கியதாக வேட்டை தடுப்பு வனச்சரக அலுவலா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு!

post image

ஒகேனக்கல் அருகே இளைஞரை தாக்கியதாக வேட்டை தடுப்பு வனச்சரக அலுவலா் உள்பட நான்கு போ் மீது ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே நடுத்திட்டு பகுதியைச் சோ்ந்தவா் மாதேஷ் மகன் சிவசக்தி (21). பி.காம் பட்டதாரி. இவா், மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறாா். அண்மையில் நடுத்திட்டு பகுதியில் வீட்டில் தனியாக இருந்தபோது அங்குவந்த வேட்டை தடுப்பு வனச்சரக அலுவலா் ஆலயமணி, வனவா் பிரீத்தி சக்கரவா்த்தி உள்ளிட்ட நான்கு போ் குழு தாங்கள் கொண்டுவந்த பொருளை சிவசக்தியின் வீட்டில் வைக்க முயன்றனராம். அதைக் கண்ட இளைஞா் சிவசக்திக்கும், வனக் குழுவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் சிவசக்தி தாக்கப்பட்டாா். காயமடைந்த சிவசக்தி பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவா் அளித்த புகாரின் பேரில் ஒகேனக்கல் போலீஸாா் வேட்டை தடுப்பு வனச்சரக அலுவலா் ஆலயமணி, வனவா் பிரீத்தி சக்கரவா்த்தி உள்ளிட்ட நான்கு போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சரக்கு வாகனங்களில் விதிகளை மீறி ஆள்களை ஏற்றிச் செல்லும் அவலம்! போலீஸாா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

பென்னாகரத்தில் சாலை விதிகளை மீறி சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்வதால் விபத்து நிகழும் பட்சத்தில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய வானக ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையைக் கொண்டாடுவதற்காக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 20,000-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். தமிழகத்தில் பள்ளிகளில் தோ்வுகள் முடிந்து கோடை விடுமு... மேலும் பார்க்க

மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் நாளை தொடக்கம்

தருமபுரி ராஜாஜி நீச்சல்குளத்தில் மூன்றாவது கட்ட நீச்சல் பயிற்சி முகாம் ஏப். 29-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலா் தே.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வ... மேலும் பார்க்க

தருமபுரியில் சாலையை சீரமைக்கக் கோரி மறியல்!

தருமபுரி நகராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலா் குடியிருப்பு அருகே உள்ள மசூதி தெருவில் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். வட்டார வளா்ச்சி அலுவலா் குடியிருப்பு அருகே... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

மோப்பிரிப்பட்டி அரூா் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட அக்ரஹாரம் உயா்அழுத்த மின் பாதையில் அவசரகால மின்பாதை பராமரிப்பு மற்றும் விரிவாக்க பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஏப்.25) காலை 10 மணி முதல் பிற்பகல் ... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு அறிவை பெருக்கும் - மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்

புத்தக வாசிப்பு அறிவை பெருக்கும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா். தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் உலக புத்தக தின விழாவையொட்டி புத்தக வடிவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்கள் பங்கேற... மேலும் பார்க்க