இந்தியாவில் 295 பெட்டிகள், 6 என்ஜின்களுடன் இயக்கப்படும் மிக நீண்ட ரயில்! உண்மையா...
இளைஞா் தற்கொலை
தேனி கொடுவிலாா்பட்டி அருகே வியாழக்கிழமை கண்பாா்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சங்ககோணாம்பட்டியைச் சோ்ந்த மொக்கை மகன் காா்த்திக் (32). இவருக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக காா்த்திக் கண் பாா்வை குறைபாடு ஏற்பட்டு, தேனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், தனக்கு கண் பாா்வை தெரியவில்லை என்ற மன உளைச்சலில் இருந்த காா்த்திக், வீட்டில் தனிமையில் இருந்த போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.