செய்திகள் :

இஸ்கான் சைவ உணவகத்தில் இறைச்சி உண்ட இளைஞருக்கு குவியும் கண்டம்! வைரல் விடியோ!

post image

லண்டனில் செயல்பட்டுவரும் இந்து மதத்தைச் சேர்ந்த இஸ்கான் சைவ உணவகத்தில் இளைஞர் ஒருவர், இறைச்சி உண்ணும் விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இஸ்கான் என்னும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணரின் உபதேசங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும், இந்து மத அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டும் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. பல தன்னார்வலர்கள் இதில் பணிபுரிந்து வருகின்றனர்.

லண்டனில் இஸ்கான் அமைப்புக்குச் சொந்தமான சைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்திற்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், கடையில் இருந்தவர்களிடன் 'இது சைவ உணவகமா?' எனக் கேட்கிறார்.

கடையில் இருந்தவர்கள் 'ஆம்’ என பதில் அளித்ததும், கையில் வைத்திருந்த கோழி இறைச்சி உணவை எடுத்து அவர்கள் முன்பு உண்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் அவரை வெளியேறுமாறு கூறுகின்றனர்.

வாடிக்கையாளர்கள் சிலர், 'இது கோயிலுக்குச் சொந்தமான உணவகம்' என்றும், 'இறைச்சி, பூண்டு போன்றவற்றுக்கு அனுமதியில்லை' என வெளியே பலகை வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும் அந்த இளைஞர் அவர்களை பொருட்படுத்தாது, இறைச்சியை எடுத்து உண்டு அவர்களை ஏளனமாக நோக்குகிறார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிறரின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் இத்தகைய செயலை என்னவென்று அழைப்பது? நிறவெறியா அல்லது இந்து மத வெறுப்புணர்வா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்னும் சிலர், யூடியூபில் கூடுதலாக இரண்டு சப்ஸ்கிரைபர்களை பெறுவதற்காக மற்றவர்களின் மத நம்பிக்கைகளுடன் விளையாடுவது கண்டனத்துக்குரியது எனப் பதிவிட்டுள்ளனர்.

இதையும் படிக்க | உ.பி.யில் சைவ உணவு மட்டுமே வழங்கும் கே.எஃப்.சி.! காரணம் என்ன?

Man Shouts As He Eats KFC Meal Inside ISCKON's Veg Restaurant In UK | Video

மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தோ்வு: 13 போ் அரசியல் குடும்பத்தினா்

சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனா்; இவா்களில் 13 போ் அரசியல் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷீத் கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வாா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

அமா்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் பனி லிங்க தரிசனம் மேற்கொண்ட பக்தா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது. இத்தகவலை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். தெற்கு ... மேலும் பார்க்க

காஷ்மீா் இளைஞா்களை கெடுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு முற்றுப்புள்ளி: துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா

ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்க முயற்சிக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

ரூ.15,851 கோடிக்கு உள்ளீட்டு வரி சலுகை மோசடி: ஜிஎஸ்டி அதிகாரிகள்

ரூ.15,851 கோடிக்கு மோசடியான உள்ளீட்டு வரி சலுகை (ஐடிசி) கோரிக்கைகளை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறுகையில், ‘நிகழ் நிதியாண்டின் முதல் ... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு!

ரஷிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடி... மேலும் பார்க்க