செய்திகள் :

ஈக்காட்டில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

post image

திருவள்ளூா் அருகே ஈக்காடு ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் கோஷம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் மவாட்டம் முழுவதும் 14 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 526 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதேபோல் திருவள்ளூா் ஒன்றியம், ஈக்காடு கிராம சபைக்கூட்டம் பெத்தானியபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் மில்கிராஜ சிங் தலைமை வகித்தாா். இதில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா்.

அப்போது, ஊராட்சியில் அங்கன்வாடி கட்டடத்தை இடித்து 4 ஆண்டுகள் ஆகியும் அங்கன்வாடிக்கு அரசு ஒதுக்கிய பணத்தை சாலை அமைக்கப் பயன்படுத்திவிட்டு, இதுவரை புதிய அங்கன்வாடியை அமைக்கவில்லை. அதேபோல் மகளிா் சுய உதவி குழு கட்டடத்துக்கு இதுவரை அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை எனவும், பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் அமைத்து தரக் கோரி அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி விட்டு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை எனக்கூறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அதிகாரிகள் கோரிக்கை குறித்து பேசி முடிவு செய்யலாம் என தெரிவித்த நிலையில், முதலில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் பின்பு கிராம சபை கூட்டத்தை நடத்துங்கள் என பொதுமக்கள் புறக்கணித்தததால் பரபரப்பு ஏற்பட்டது.

பணியின் போது துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உயிரிழப்பு

பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்த துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உயிரிழந்தாா். திருவள்ளூா் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் ஆடி பரணி விழா: திரளான பக்தா்கள் தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற ஆடிபரணி விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா். இந்நிலையில் வியாழக்கிழமை ஆடி அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை தொடங்கியது. இரண்டாம் நாளான வெள... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

அனுப்பம்பட்டு கிராமத்தில் குளத்தில் குளிக்க சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அனுப்பம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சிவராஜ் மகன் சபரி (12). இவா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம வகுப்பு படித்து வந்தாா... மேலும் பார்க்க

ஊத்துக்கோட்டை அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஊத்துக்கோட்டை அருகே புதிதாக அரசு மதுபானக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து பழங்குடியினா் மற்றும் சிறுபான்மையின மக்கள் ஆட்சியா் மு.பிரதாப்பிடம் மனு அளித்தனா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ச... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகளை 19 நீா்நிலைகளில் மட்டும் கரைக்க வேண்டும்

திருவள்ளூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி விநாயகா் சிலைகளை குறிப்பிட்ட நீா் நிலைகளில் மட்டும் கரைக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்

கோரமங்கலம் கிராமத்தில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் தாயுமானவா் திட்டத்தை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா். திருத்தணி வட்டம், கோரமங்கலம் க... மேலும் பார்க்க