செய்திகள் :

ஈரானுக்கு உதவத் தயார்! அமெரிக்க தாக்குதலுக்கு கடும் கண்டனம்! - ரஷியா

post image

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 3 முக்கிய  அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது இந்த போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ரஷியாவில் அதிபர் புதினை இன்று சந்தித்துப் பேசினார்.

ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் நியாயமற்றது என்று கூறிய புதின், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானிய மக்களுக்கு உதவ ரஷியா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

முன்னதாக ஈரானுக்கு ரஷியா உதவ வேண்டும் என ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஈரானின் தேவையைப் பொருத்து ரஷியா உதவும் என்றும் இஸ்ரேல்- ஈரான் நாடுகளுக்கு இடையே சமரசம் செய்து வைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க | பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது!

அமெரிக்காவுக்கும் பதிலடி; ஈரான் அதிரடி! ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்!

கத்தாரில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.மத்திய வளைகுடாவில் உள்ள கத்தார் நாட்டின் தோஹாவில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளமான அல்-உதெய்த் (Al Udeid) தளத்தை குறிவ... மேலும் பார்க்க

காஸாவில் சர்வதேச ஊடகங்களுக்குத் தடை விதிக்கும் இஸ்ரேல்!

உண்மையை மறைப்பதற்காக காஸாவில் சர்வதேச ஊடகங்களுக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரிட்டன் தேசிய செய்தித்தாளின் இளம் ஆசிரியராக இருந்த, அமெரிக்காவைச் சேர்ந்த பியர்ஸ் மோர்கன் இதனைத் த... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கான விமானங்களை ரத்து செய்தது பிரான்ஸ்!

ஈரான் உடன் போரில் ஈடுபட்டுள்ளதால் இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமானங்களை ஜூலை 14ஆம் தேதி வரை ரத்து செய்வதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.இது குறித்து பேசிய பிரெஞ்சு ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்,... மேலும் பார்க்க

அமெரிக்கா, இஸ்ரேலின் அடுத்த குறி அரபு நாடுகளே: ஃபரூக் அப்துல்லா கண்டனம்!

ஸ்ரீநகர்: அமெரிக்கா, இஸ்ரேலின் அடுத்த குறி அரபு நாடுகளே என்று ஃபரூக் அப்துல்லா பேசியிருக்கிறார். இதன்மூலம், தேசிய மாநாட்டு(என் சி) கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா அரபு நாடுகளுக்கு இன்று(ஜூன் 23) எச்சர... மேலும் பார்க்க

ஈரானைத் தொடர்ந்து கத்தாருக்கு அச்சுறுத்தலா?

கத்தாரில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருவதால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், இது பதற்றமான சூழலை பிரதிபலிக்கவில்லை எனவும் கத்... மேலும் பார்க்க

பங்கர் பஸ்டர் வேஸ்ட்.. முன்பே வெளியேற்றப்பட்ட யுரேனியம்: டிரம்ப்புக்கு டஃப் கொடுக்கும் ஈரான்!

அமெரிக்கா, பங்கர் பஸ்டர் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவதற்கு முன்gபே, ஃபார்டவ் அணுசக்தி மையத்திலிருந்து 400 கிலோ கிராம் யுரேனியத்தை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டதாக ஈரான் கூறி வரும் நிலையில் அது ப... மேலும் பார்க்க