ஈரானையே உலுக்கிய இஸ்ரேலின் பெண் உளவாளி! தடயமே இல்லாமல் மாயமான கதை!!
பல ஹாலிவுட் படங்களில் பார்ப்பது போலத்தான் ஈரானிலும் நடந்தது. ஈரானுக்குள் நுழைந்து முக்கிய தலைவர்கள், உயர் அதிகாரிகளின் வீட்டுக்குள் நுழைந்த இஸ்ரேலின் பெண் உளவாளி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் - ஈரான் இடையே சண்டை நடந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நடந்த உலகை உலுக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றாக வைரலாகி வருகிறது.
ஈரானின் அணு விஞ்ஞானி என கருதப்படும் மொஹ்சென் ஃபக்ரிசாதே-வை, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் எவ்வாறு ஏஐ - ரோபோ உதவியுடன் படுகொலை செய்தது என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று மொசாட்டின் அரக்கி என்று கூறப்படும் அளவுக்கு வேலை செய்த பெண் உளவாளி பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.