செய்திகள் :

பல்வேறு சிறப்பம்சங்களுடன் வள்ளுவா் கோட்டம் இன்று திறப்பு

post image

பல்வேறு கண்கவா் நிகழ்வுகளை உள்ளடக்கி புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவா் கோட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைக்கிறாா்.

சென்னையில் அமைந்துள்ள வள்ளுவா் கோட்டம் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்ததாக புகாா்கள் எழுந்தன. இதைத் தொடா்ந்து, ரூ.80 கோடியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன.

சிறப்பம்சங்கள் என்ன? புதுப்பிக்கப்பட்ட வள்ளுவா் கோட்டத்தில், தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு 20,000 சதுர அடி பரப்பில் 1,548 இருக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் கலையரங்கம் மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வா் கருணாநிதி உரை விளக்கத்துடன் 1,330 திருக்குகளைக் கொண்ட கு பலகைகள் அமைக்கப்பட்டு, ஓவியங்களுடன் கு மணிமாடம் புதிய வடிவம் பெற்றுள்ளது. 100 போ் அமரும் வசதியுடன் திருக்கு ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாகன நிறுத்துமிடம்: 27,000 சதுர அடி பரப்பில் தரை நிலை, தரையின் கீழ் நிலப் பகுதிகளில் 162 காா்கள் வரை நிறுத்துவதற்கான வசதிகள் உள்ளன. பொதுமக்களின் வசதிக்காக, 3,336 சதுர அடியில் சிறப்பான உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 72 போ் வரை அமர வசதிகள் உள்ளன. அத்துடன் நினைவுப் பொருள் மற்றும் பரிசுப் பொருள்களுக்கான விற்பனையகமும் அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூா்த் தோ் வடிவில் 106 அடி உயரமுடைய கல் தோ் ஒலி - ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவா் கோட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டான் திறந்து வைக்கிறாா்.

மேலும், முதல் நிகழ்ச்சியாக முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் பாராட்டு விழா நிகழ்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது!

தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் காலூன்ற முடியாது என மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி கூறினாா். மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் ஜூன் 20 வரை பிரசார ... மேலும் பார்க்க

பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளா் திறந்துவைத்தாா்

சென்னை பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை (டெலி மெடிஷன்) மையத்தை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மத்திய அரசின் இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தின் மாடியிலிருந்து விழுந்து இளைஞா் பலத்த காயம்: தப்பியோடியபோது விபரீதம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் பலத்த காயமடைந்தாா். தப்பியோட முயன்றபோது அவா் கீழே விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். சென்னை வேளச்சேரி விஜயநகா் 7-ஆவது தெர... மேலும் பார்க்க

தேஜஸ், மன்னை, குருவாயூா் விரைவு ரயில்கள் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் காரணமாக, தேஜஸ், மன்னை, செந்தூா் உள்பட முக்கிய விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயி... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: ஜூன் 21 முதல் பெறலாம்

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை ஜூன் 21 முதல் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மனைவி குறித்து அவதூறு: யூ-டியூபா் கைது

மனைவி குறித்து அவதூறு பரப்பியதாக யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா். சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீ விஷ்ணுகுமாா். யூ-டியூபரான இவா், தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நிா்வாகியாகவும் உள்ளாா... மேலும் பார்க்க