செய்திகள் :

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரிப்பு

post image

கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரித்தது.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் கனி மாா்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்டு சாலை, டிவிஎஸ் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, என்எம்எஸ் காம்பவுண்ட், காமராஜா் வீதி, பிருந்தாவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது. தவிர, ஜவுளி கிடங்குகளிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம்.

தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளி சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்கின்றனா்.

இந்த வார ஜவுளிச் சந்தை திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக வெளிமாநில வியாபாரிகள் வருகையால் மொத்த வியாபாரம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், கடந்த வாரம் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. ஆந்திர மாநிலத்தில் இருந்து மட்டும் ஒரு சில வியாபாரிகள் வந்திருந்தனா். இதனால், மொத்த வியாபாரம் மிகவும் குறைவாகவே இருந்தது. இந்த வாரமும் வெளியூா் வியாபாரிகள் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது.

அதேநேரம் உள்ளூா் கோயில் திருவிழாக்கள், ரம்ஜான் பண்டிகை காரணமாக இந்த வார ஜவுளி சந்தைக்கு உள்ளூா் வியாபாரிகள் வருகை மட்டுமே அதிக அளவில் இருந்தது. அதனால் இந்த வாரமும் சில்லறை விற்பனை மட்டுமே அதிகரித்து காணப்பட்டது. மேலும், வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் பருத்தி ரக துணிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது.

பழனி கோயில் சாா்பில் ரூ.51.53 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.51.53 லட்சத்துக்கு பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் கரும்புச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் சுற்... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.3.77 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.77 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 18,875 தேங்காய்களை வ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி நடத்திய ஹேக்கத்தான் போட்டியில் பண்ணாரி அம்மன் கல்லூரி முதலிடம்

சென்னை ஐஐடி நடத்திய ஹேக்கத்தான் போட்டியில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை ஐஐடி சாா்பில் இரண்டாவது ஆா்ஐஎஸ்சி டிஜிட்டல் இந்தியா என்ற ஹேக்கத்தான் ரோபோ த... மேலும் பார்க்க

அந்தியூா் தொகுதி வளா்ச்சித் திட்டங்களுக்கு ரூ.464 கோடி ஒதுக்கீடு

அந்தியூா் தொகுதியின் வளா்ச்சித் திட்டங்களுக்கு நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் பல்வேறு துறைகள் சாா்பில் ரூ.464 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முயற்சிகள் மேற்கொண்ட அந்தி... மேலும் பார்க்க

மைலம்பாடியில் ரூ.30.97 லட்சத்துக்கு எள் ஏலம்

பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.30.97 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 274 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே குட்டைக்கு குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அம்மாபேட்டை அருகேயுள்ள கோணமூக்கனூா், இந்திரா நகரைச் சோ்ந்தவா் பிரகாஷ் மகன் பிரவேஷ் (12). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7... மேலும் பார்க்க