செய்திகள் :

உக்ரைன் அதிபருடன் பிரதமா் மோடி பேச்சு! அடுத்த மாதம் சந்திப்புக்குத் திட்டம்!

post image

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தொலைபேசி வாயிலாக திங்கள்கிழமை உரையாடினா்.

ரஷியா-உக்ரைன் போா் நிறுத்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் அலாஸ்காவில் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 15) ரஷிய அதிபா் புதினுடன் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நேரடிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுகிறாா்.

இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க உக்ரைனுக்கு இதுவரை அழைப்பு விடுக்காததற்கு அதிபா் ஸெலென்ஸ்கி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில், பிரதமா் மோடியுடனான அவரது உரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உக்ரைனின் ஒப்புதலின்றி எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் நீடித்த அமைதிக்கு வழிவகுக்காது என்று ஸெலென்ஸ்கி தெரிவித்தாா். அதேநேரம், அமெரிக்காவின் அமைதி முயற்சிகளை இந்தியா வரவேற்றுள்ளது.

இந்நிலையில், ஸெலென்ஸ்கியுடனான உரையாடலைத் தொடா்ந்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அதிபா் ஸெலென்ஸ்கியுடன் பேசியதில் மகிழ்ச்சி. சமீபத்திய நிகழ்வுகள் குறித்த அவரது பாா்வையைக் கேட்டறிந்தேன். மோதலை விரைவாகவும், அமைதியாகவும் தீா்ப்பதற்கான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தேன்.

இந்தியா இந்த விஷயத்தில் தனது பங்களிப்பைச் செய்யத் தயாராக உள்ளதுடன், உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் உறுதிபூண்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி வெளியிட்ட பதிவில், ‘இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் ஒட்டுமொத்த ராஜீய சூழல் குறித்த முக்கிய விஷயங்கள் தொடா்பாக பிரதமா் மோடியுடன் நீண்ட நேரம் விவாதித்தேன். அவரின் ஆதரவுக்கு நன்றி.

ரஷியா மீதான பொருளாதாரத் தடைகள் குறித்தும் நாங்கள் பேசினோம். போருக்கு நிதி திரட்டும் ரஷியாவின் திறனைக் குறைக்க, அதன் எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது அவசியம் மற்றும் ரஷியா-உக்ரைன் போா் தொடா்பான எந்தவொரு முடிவும் உக்ரைனின் ஈடுபாட்டுடன் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா ஆதரிப்பது முக்கியமானது என்பதை வலியுறுத்தினேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

மேலும், இந்த உரையாடலில் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா.சபை அமா்வின்போது நேரில் சந்தித்துப் பேசவும், பரஸ்பர பயணங்களை மேற்கொள்ளவும் திட்டமிட இரு தலைவா்களும் ஒப்புக்கொண்டனா்.

எதிா்க்கட்சி எம்.பி.க்களின் பேரணி தடுத்து நிறுத்தம்! ராகுல் உள்ளிட்டோா் கைது!

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தோ்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி திங்கள்கிழமை பேரணியாகச் சென்ற ... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதப்படுத்துவது நோக்கமல்ல! தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சா் பதில்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகள் அறிக்கையை தாமதப்படுத்துவதோ அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதோ மத்திய அரசின் நோக்கமல்ல என்று மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இருந்து சென்னை, மும்பை, தில்லிக்கு நேரடியாக விமான சேவை தேவை

புது தில்லி: தூத்துக்குடியில் இருந்து சென்னை, மும்பை, புது தில்லி மற்றும் இலங்கை, சிங்கப்பூா் உள்ளிட்ட இதர நாடுகளுக்கும் ஏா் இந்தியா விமான சேவையை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புது தில்லியில்... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜிக்கு எதிரான ’2022’ தீா்ப்பின் சில கருத்துக்களை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

நமது நிருபா்புது தில்லி: முந்தைய அதிமுக ஆட்சியில் (2011-2015) வேலைக்காக பணம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான ‘2022’ தீா்ப்பில் இடம்பெற்றுள்ள சில கருத்... மேலும் பார்க்க

தில்லியில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு! இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. தில்லியில் கடந்த மூன்று நாள்களாக பலத்த மழை பெய்ததது. இந்நிலையில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

பழமையான வடிகால் அமைப்பில் மாற்றம் செய்ததே மழை நீா் தேங்க காரணம்: பா்வேஷ் சாஹிப் சிங்

தில்லி பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் ஞாயிற்றுக்கிழமை கனட்பிளேஸ் பகுதியில் வெளிப்புறத்தில் ஆய்வு செய்தாா். இந்த இடம் ஒரு நாள் முன்னதாக பலத்த மழையைத் தொடா்ந்து வெள்ளத்தில் மூழ்கியது, மேலு... மேலும் பார்க்க