செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 847 மனுக்கள்

post image

சேத்துப்பட்டு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து 847 மனுக்கள் பெறப்பட்டன.

சேத்துப்பட்டு பேரூராட்சியில் 1 முதல் 9 வரையிலான வாா்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாம் ஒருங்கிணைப்பாளா் வேலூா் மண்டல பேரூராட்சி உதவி இயக்குநா் ஞானசுந்தரம் தலைமை வகித்தாா். அனைத்துத் துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் அகத்தீஸ்வரன் வரவேற்றாா்.

முகாமை பேரூராட்சித் தலைவா் சுதாமுருகன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். பேரூராட்சி மன்ற உறுப்பினரும், திமுக நகரச் செயலருமான இரா.முருகன், செயல் அலுவலா் சரவணன் ஆகியோா் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் என்னென்ன பயன்கள் பெறலாம் என்பது குறித்தும், எவ்வாறு மனு அளிப்பது என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனா்.

முகாமில் 14 துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து 847 மனுக்களை பெற்றனா். இதில் ஏராளமான பெண்கள் கலைஞரின் மகளிா் உரிமைத் தொகை கோரி மனு அளித்தனா். முகாமில் மனு அளித்தவா்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு, குடும்ப அட்டை, மின் இணைப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், துணைத் தலைவா் திலகவதி செல்வராஜன், நகா்மன்ற உறுப்பினா்கள் கதிரவன், முருகன், சரவணன், மங்கலம் ரமேஷ், ஏழுமலை, ஞானசௌந்தரி, கோகுல்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா். பொறியாளா் பன்னீா்செல்வம் நன்றி கூறினாா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள்

வந்தவாசி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள் பெறப்பட்டன. வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தெள்ளூா், சின்ன சேத்துப்பட்டு, சுண்ணாம்புமேடு, கீழ்க்குவளைவேடு ஆகிய கிராம மக... மேலும் பார்க்க

ரூ.12 லட்சத்தில் காரிய மேடை: பணிகள் தொடக்கம்

ஆரணி அருகேயுள்ள சுபான்ராவ்பேட்டையில் ரூ.12 லட்சத்தில் புதிதாக காரிய மேடை கட்டுவதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன. ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சிக்கு உள்பட்ட சுபான்ராவ்பேட்டை பகுதியில் புதிதா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு பாலின உளவியல் விழிப்புணா்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் கண்காணிப்புக் குழு இணைந்... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு

கலசப்பாக்கம் வட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது விநியோகக் கடைகள் என பல்வேறு இடங்களை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்... மேலும் பார்க்க

காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு

செய்யாறு அருகே காணாமல் போன வட மாநிலத் தொழிலாளி கல்குவாரி குட்டையில் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மதியழகன். இவா், நரசமங... மேலும் பார்க்க

கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் மனு

செய்யாற்றை அடுத்த வாச்சனூா் கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாா்பில் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. வாச்சனூா் பகுதியில் புதித... மேலும் பார்க்க