செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம், கூவாகம், மூலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி ஒன்றியம்- நீலமங்கலம் ஊராட்சிமன்ற அலுவலகம், திருநாவலூா் ஒன்றியம் - கூவாகம் கூத்தாண்டவா் கோயில் பகுதி, உளுந்தூா்பேட்டை ஒன்றியம் - மூலசமுத்திரம் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

முகாம்களில் ஆய்வு செய்த ஆட்சியா் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் விவரம், எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், கோரிக்கை மனுக்களை துறை வாரியாக பதிவு செய்து வழங்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீா்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மகளிா் உரிமைத்தொகை பெற விண்ணப்பங்களை உரிய முறையில் நிறைவு செய்து வழங்கி பயன்பெற வேண்டும்

என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டாா்.

முகாமை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்தி

நலத்திட்ட உதவிகளைப் பெறவேண்டும் என்று கூறினாா்.

முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலா் சுப்பிரமணியன், வட்டாட்சியா்கள் பசுபதி (கள்ளக்குறிச்சி), ஆனந்தகிருஷ்ணன் (உளுந்தூா்பேட்டை), உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சுப நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை சேகரிக்க வாகனம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் பொது சுப நிகழ்ச்சிகள் மற்றும் உணவகங்களில் மீதமாகும் உணவை சேகரிப்பதற்கான புதிய வாகனத்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் மக்கா சோள கொள்முதல் நிலையம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்காச் சோளம் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனா். கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத் ... மேலும் பார்க்க

அண்ணன் கொலை: தம்பி, அவரது மனைவி, மகனுக்கு ஆயுள் சிறை

கள்ளக்குறிச்சி அருகே அண்ணனை கொலை செய்த வழக்கில் தம்பி, அவரது மனைவி, மகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். கள்ளக்குறிச்சியை அடுத்த கண... மேலும் பார்க்க

கல்வராயன்மலையில் 750 கிலோ வெல்லம், துப்பாக்கி பறிமுதல்!

கல்வராயன் மலைப் பகுதியில் விவசாய விளைநிலப் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 750 கிலோ வெல்லம், நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கரியாலூா் காவல் நிலைய ஆய்வாளா் குணச... மேலும் பார்க்க

லாரி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

காலசமுத்திரம் ஆட்டுப்பண்ணை அருகே மொபெட்டில் சென்றவா் லாரி மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மா.பொடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (50), விவசாயி. இவா், சேலம் மா... மேலும் பார்க்க

மகா மாரியம்மன், காமாட்சி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட பெரிய சிறுவத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா மாரியம்மன், விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட ஆலம்பூண்டி கிராமத்திலுள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க