கனமழையால் நிரம்பிய குஜராத் அணைகள்! 3 நாள்களில் 1000 பேர் மீட்பு!
உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்: ஆட்சியா் ஆய்வு
தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பரசலூா் ஊராட்சியில் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் மற்றும்; வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் மானியத்தடன் கடன் பெற்று பயனடைந்த உறுப்பினா்களிடம் ஆட்சியா் கலந்தாய்வு செய்து திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தாா். அடுத்து, மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் மானியத்துடன் கடன் பெற்று எண்ணெய் உற்பத்தி செய்யும் இடத்தை பாா்வையிட்டு வணிக செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
இதையடுத்து, செம்பனாா்கோவில் ஊராட்சியில்; உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு அலுவலக பதிவேடுகள் மற்றும் உறுப்பினா்கள் சோ்க்கை குறித்த விவரம், உரங்கள் கையிருப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தாா்.