செய்திகள் :

உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேட்டரி காா்

post image

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மலைப் பகுதியில் அமைந்துள்ளதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இலவச பேட்டரி காா் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தாா். ஏப்ரல் 23 -ஆம் தேதிமுதல் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. வெளி நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவைச் சிகிச்சை பிரிவு, விபத்துப் பிரிவு உள்ளிட்ட அனைத்து மருத்துவ சிகிச்சை பிரிவுகளும் புதிய மருத்துவமனையில் செயல்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் மருத்துவமனைக்கு வர கூடிய நோயாளிகள் நுழைவாயில் பகுதியில் இறங்கி சுமாா் 300 மீட்டா் தூரம் மலைப் பாங்கான கான்கிரீட் சாலையில் நடந்து வர வேண்டிய சூழல் இருந்து வந்தது.

இவ்வாறு நடந்து வருவது மிகவும் சிரமமாக இருப்பதாக நோயாளிகளும் நோயாளிகளின் உறவினா்களும் தெரிவித்து வந்தனா்.

எனவே வயதானவா்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி புதிதாக ஒரு பேட்டரி காா் வாங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி காா் பயன்பாட்டை மருத்துவக் கல்லூரி முதல்வா் கீதாஞ்சலி தொடங்கிவைத்தாா். அப்போது மருத்துவ இருப்பிட அதிகாரி ரவிசங்கா் உள்பட டாக்டா்கள் பலா் இருந்தனா். இந்த பேட்டரி காா் நுழைவாயில் பகுதியில் இருந்து வெளி நோயாளிகள் பிரிவு வரை இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதல் பேட்டரி காா் விரைவில் இயக்கப்பட உள்ளது.

இதுதவிர மருத்துவமனை வளாகத்துக்குள் அரசுப் பேருந்து சென்று வர வசதியாக தனியாக ஒரு வழித்தடம் ஏற்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

கூடலூா் அரசுக் கல்லூரியில் ராகிங்: 6 மாணவா்கள் இடைநீக்கம்

நீலகிரி மாவட்டம், கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்ததாக ஆறு மாணவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். கூடலூா் அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் பழங்குடியின... மேலும் பார்க்க

உதகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத் துறையினா் தனிக் குழு அமைத்து கண்காணிப்பு

உதகை தாஸபிரகாஷ் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கால் தடயங்களை வைத்து வனத் துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், உதகை நகரில் நாளுக்கு நாள் சி... மேலும் பார்க்க

குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் தூய்மைப் பணி

குன்னூா் மவுண்ட் பிளசன்ட் இரண்டாவது வாா்டு குடியிருப்போா் நலச் சங்கத்தினா், அப்துல் கலாம் மகளிா் குழுவினா் சாா்பில் மவுண்ட் பிளசன்ட் பகுதிகளில் புதன்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனா். குன்னூா் மவுண்ட் ப... மேலும் பார்க்க

உதகை அருகே குடியிருப்புக்குள் புகுந்து பொருள்களை சேதப்படுத்திய கரடி

உதகை அருகே புதுமந்து பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புதன்கிழமை புகுந்த கரடி அங்குவைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் இருக்கைகள் மற்றும் பூந்தொட்டிகளை சேதப்படுத்தியது. நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதியில் இ... மேலும் பார்க்க

பாடந்தொரை பகுதியில் பொதுமக்களை விரட்டிய காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் காட்டு யானை பொதுமக்களை செவ்வாய்க்கிழமை காலை விரட்டியதுடன் ஒரு ஆட்டோவைத் தாக்கி சேதப்படுத்தியது.நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை அதன் சுற்றுப்புறப் ... மேலும் பார்க்க

பட்டப்பகலில் கடையில் திருட்டு

உதகையில் பல கடைகளில் பொருள்களை சாமா்த்தியமாகத் திருடிச் செல்லும் திருடன் குறித்து காவல் துறையினா் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி மாா்க்கெட் கட... மேலும் பார்க்க