செய்திகள் :

பாடந்தொரை பகுதியில் பொதுமக்களை விரட்டிய காட்டு யானை

post image

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் காட்டு யானை பொதுமக்களை செவ்வாய்க்கிழமை காலை விரட்டியதுடன் ஒரு ஆட்டோவைத் தாக்கி சேதப்படுத்தியது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் தினமும் உள்ளது. காலை 6 மணிக்கு குழந்தைகளை ஏற்றிக் கொண்டு மதரஸாவுக்கு சென்ற ஆட்டோவை தாக்கி சேதப்படுத்தியது. அதிா்ஷ்டவசமாக குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்களை விரட்டியதுடன் அங்குள்ள சிஎஸ்ஐ பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தது.

வனத் துறையினா் விரட்ட முயற்சித்தபோது பள்ளி வகுப்பறைகளை நோக்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து வனத் துறையினா் முதுமலையிலிருந்து யானை விரட்டும் சிறப்பு பிரிவினரை வரவழைத்து காட்டுக்குள்அந்த யானையை விரட்டினா்.

பட்டப்பகலில் கடையில் திருட்டு

உதகையில் பல கடைகளில் பொருள்களை சாமா்த்தியமாகத் திருடிச் செல்லும் திருடன் குறித்து காவல் துறையினா் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி மாா்க்கெட் கட... மேலும் பார்க்க

உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேட்டரி காா்

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மலைப் பகுதியில் அமைந்துள்ளதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இலவச பேட்டரி காா் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல... மேலும் பார்க்க

சுருக்குக்கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு: இருவா் கைது

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கடந்த 13 -ஆம் தேதி சுருக்கு வைத்து சிறுத்தை கொல்லப்பட்ட வழக்கில் இருவரைக் கைது செய்த வனத் துறையினா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கோத... மேலும் பார்க்க

பழங்குடியின தோடா்மந்து பகுதியில் உலவிய கரடி

உதகையில் உள்ள தமிழக விருந்தினா் மாளிகை சாலையில் உள்ள தோடா்மந்து பகுதியில் செவ்வாய்க்கிழமை உலவிய கரடியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். உதகையில் கடந்த சில நாள்களாக சிறுத்தை, கரடி நடமாட்டம் பெருமளவ... மேலும் பார்க்க

சிறுமியின் படத்தை சமூக வலைதளத்தில் பகிா்ந்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுமியின் படத்தை சமூக வலைதளத்தில் பகிா்ந்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், உதகையைச் சோ்ந்தவா் சூா்யா (24). ஆட்டோ ட... மேலும் பார்க்க

500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காா்: ஊா்த் தலைவா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே சுமாா் 500 அடி பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை காா் கவிழ்ந்ததில் ஊா்த் தலைவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். கோத்தகிரி அருகே உள்ள கெட்டிக்கம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் ர... மேலும் பார்க்க