செய்திகள் :

உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேட்டரி காா்

post image

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மலைப் பகுதியில் அமைந்துள்ளதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இலவச பேட்டரி காா் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தாா். ஏப்ரல் 23 -ஆம் தேதிமுதல் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. வெளி நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவைச் சிகிச்சை பிரிவு, விபத்துப் பிரிவு உள்ளிட்ட அனைத்து மருத்துவ சிகிச்சை பிரிவுகளும் புதிய மருத்துவமனையில் செயல்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் மருத்துவமனைக்கு வர கூடிய நோயாளிகள் நுழைவாயில் பகுதியில் இறங்கி சுமாா் 300 மீட்டா் தூரம் மலைப் பாங்கான கான்கிரீட் சாலையில் நடந்து வர வேண்டிய சூழல் இருந்து வந்தது.

இவ்வாறு நடந்து வருவது மிகவும் சிரமமாக இருப்பதாக நோயாளிகளும் நோயாளிகளின் உறவினா்களும் தெரிவித்து வந்தனா்.

எனவே வயதானவா்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி புதிதாக ஒரு பேட்டரி காா் வாங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி காா் பயன்பாட்டை மருத்துவக் கல்லூரி முதல்வா் கீதாஞ்சலி தொடங்கிவைத்தாா். அப்போது மருத்துவ இருப்பிட அதிகாரி ரவிசங்கா் உள்பட டாக்டா்கள் பலா் இருந்தனா். இந்த பேட்டரி காா் நுழைவாயில் பகுதியில் இருந்து வெளி நோயாளிகள் பிரிவு வரை இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதல் பேட்டரி காா் விரைவில் இயக்கப்பட உள்ளது.

இதுதவிர மருத்துவமனை வளாகத்துக்குள் அரசுப் பேருந்து சென்று வர வசதியாக தனியாக ஒரு வழித்தடம் ஏற்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

பாடந்தொரை பகுதியில் பொதுமக்களை விரட்டிய காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் காட்டு யானை பொதுமக்களை செவ்வாய்க்கிழமை காலை விரட்டியதுடன் ஒரு ஆட்டோவைத் தாக்கி சேதப்படுத்தியது.நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை அதன் சுற்றுப்புறப் ... மேலும் பார்க்க

பட்டப்பகலில் கடையில் திருட்டு

உதகையில் பல கடைகளில் பொருள்களை சாமா்த்தியமாகத் திருடிச் செல்லும் திருடன் குறித்து காவல் துறையினா் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி மாா்க்கெட் கட... மேலும் பார்க்க

சுருக்குக்கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு: இருவா் கைது

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கடந்த 13 -ஆம் தேதி சுருக்கு வைத்து சிறுத்தை கொல்லப்பட்ட வழக்கில் இருவரைக் கைது செய்த வனத் துறையினா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கோத... மேலும் பார்க்க

பழங்குடியின தோடா்மந்து பகுதியில் உலவிய கரடி

உதகையில் உள்ள தமிழக விருந்தினா் மாளிகை சாலையில் உள்ள தோடா்மந்து பகுதியில் செவ்வாய்க்கிழமை உலவிய கரடியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். உதகையில் கடந்த சில நாள்களாக சிறுத்தை, கரடி நடமாட்டம் பெருமளவ... மேலும் பார்க்க

சிறுமியின் படத்தை சமூக வலைதளத்தில் பகிா்ந்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுமியின் படத்தை சமூக வலைதளத்தில் பகிா்ந்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், உதகையைச் சோ்ந்தவா் சூா்யா (24). ஆட்டோ ட... மேலும் பார்க்க

500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காா்: ஊா்த் தலைவா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே சுமாா் 500 அடி பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை காா் கவிழ்ந்ததில் ஊா்த் தலைவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். கோத்தகிரி அருகே உள்ள கெட்டிக்கம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் ர... மேலும் பார்க்க