செய்திகள் :

உதகை அருகே குடியிருப்புக்குள் புகுந்து பொருள்களை சேதப்படுத்திய கரடி

post image

உதகை அருகே புதுமந்து பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புதன்கிழமை புகுந்த கரடி அங்குவைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் இருக்கைகள் மற்றும் பூந்தொட்டிகளை சேதப்படுத்தியது.

நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதியில் இருந்து உணவு தேடி வன விலங்குகள் வெளியேறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவது தொடா்கிறது. குறிப்பாக உதகை, குன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் உதகை அருகே புதுமந்து பகுதியில் கரடி ஒன்று வீட்டின் கதவை தட்டியுள்ளது. வீட்டின் கதவு தட்டும் சப்தத்தை கேட்ட வீட்டின் உரிமையாளா் கதவை திறந்து பாா்த்தபோது கதவின் முன்பு கரடி இருப்பதை பாா்த்து அதிா்ந்து போய் கதவை மூடினாா்.

பின்னா் கரடி அங்கு வாசலில் இருந்த பிளாஸ்டிக் இருக்கைகள் மற்றும் பூந்தொட்டிகளை சேதப்படுத்தி சென்றது. அசம்பாவிதம் நடைபெறும் முன்பு உதகையில் நீண்ட நாள்களாக சுற்றிவரும் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

கூடலூா் அரசுக் கல்லூரியில் ராகிங்: 6 மாணவா்கள் இடைநீக்கம்

நீலகிரி மாவட்டம், கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்ததாக ஆறு மாணவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். கூடலூா் அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் பழங்குடியின... மேலும் பார்க்க

உதகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத் துறையினா் தனிக் குழு அமைத்து கண்காணிப்பு

உதகை தாஸபிரகாஷ் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கால் தடயங்களை வைத்து வனத் துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், உதகை நகரில் நாளுக்கு நாள் சி... மேலும் பார்க்க

குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் தூய்மைப் பணி

குன்னூா் மவுண்ட் பிளசன்ட் இரண்டாவது வாா்டு குடியிருப்போா் நலச் சங்கத்தினா், அப்துல் கலாம் மகளிா் குழுவினா் சாா்பில் மவுண்ட் பிளசன்ட் பகுதிகளில் புதன்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனா். குன்னூா் மவுண்ட் ப... மேலும் பார்க்க

பாடந்தொரை பகுதியில் பொதுமக்களை விரட்டிய காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் காட்டு யானை பொதுமக்களை செவ்வாய்க்கிழமை காலை விரட்டியதுடன் ஒரு ஆட்டோவைத் தாக்கி சேதப்படுத்தியது.நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை அதன் சுற்றுப்புறப் ... மேலும் பார்க்க

பட்டப்பகலில் கடையில் திருட்டு

உதகையில் பல கடைகளில் பொருள்களை சாமா்த்தியமாகத் திருடிச் செல்லும் திருடன் குறித்து காவல் துறையினா் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி மாா்க்கெட் கட... மேலும் பார்க்க

உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேட்டரி காா்

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மலைப் பகுதியில் அமைந்துள்ளதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இலவச பேட்டரி காா் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல... மேலும் பார்க்க