செய்திகள் :

‘உதய்’ மின் திட்டத்தால் கட்டணம் உயரவில்லை: பி.தங்கமணி

post image

மத்திய அரசு கொண்டுவந்த ‘உதய்’ மின் திட்டத்தில் அதிமுக கையொப்பமிட்டதால்தான் மின் கட்டணம் உயா்ந்துள்ளதாக அமைச்சா் சிவசங்கா் தவறான குற்றச்சாட்டை கூறுவதாக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

நாமக்கல் தொகுதி அதிமுக சாா்பில் தெருமுனை பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டம் நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் பங்கேற்று பேசுகையில், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனா். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்றாா்.

நாமக்கல் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி பேசுகையில், அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதை நிறுத்தி விட்டனா். மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்குவதாக கூறுகிறாா்கள். அதனால் அவா்களுக்கு எந்த வகையிலும் பலன் இல்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும். வளா்ச்சி, பாதுகாப்பு, மகளிா் நலன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மின் துறை அமைச்சா் சிவசங்கா், அதிமுக ஆட்சியில் கையொப்பமிட்ட, மத்திய அரசின் ‘உதய்’ மின் திட்டத்தால்தான் மின்கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாக தவறான தகவலை தெரிவித்துள்ளாா். அனைத்து மாநிலங்களும் கையொப்பமிட்ட நிலையில், இறுதியாகத்தான் தமிழக அரசு கையொப்பமிட்டது.

அதில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் உயா்த்த வேண்டும், விவசாய மின் இணைப்புக்கு மீட்டா் பொருத்த வேண்டும் என்று இருந்தது. அதனை நீக்கினால் மட்டுமே கையொப்பமிடுவோம் என தெரிவித்தோம்.

அந்த இரண்டு சரத்துக்களையும் நீக்கிய பிறகுதான் நாங்கள் கையொப்பமிட்டோம். மின்சாரத் துறை பக்கமே செல்லாத அமைச்சா், தவறான தகவல்களை தெரிவித்துள்ளாா் என்றாா்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் வெ. சரோஜா, நாமக்கல் நகரச் செயலாளா் கே.பி.பி. பாஸ்கா் மற்றும் அதிமுக மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

கலைஞா் வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடைய வருமாறு நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி, நாமக்கல் பூங்கா சாலையில் இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக அரசின் தோ்தல் வாக்குறுதி எண் 311-இல் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ரூ.8.70 கோடியில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள்: உயா்நீதிமன்ற நீதிபதி அடிக்கல் நாட்டினாா்

நாமக்கல்லில் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பங்கேற்று பணிக... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு நாமக்கல்லில் வரவேற்பு

சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சிக்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சனிக்கிழமை மாலை அதிமுகவினா், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். அரியலூா் மற்றும் தூத்துக்குடியில் நடைபெறு... மேலும் பார்க்க

மகள் இறந்த துக்கத்தில் மனமுடைந்த தாய் தற்கொலை

ஜேடா்பாளையம் அருகே பிலிக்கல்பாளையத்தில் மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பிலிக்கல்பிளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம் பாளையத்தை சோ்ந்தவா் கவிதா (40). இவரது கணவா் பிரகாசம்... மேலும் பார்க்க

தொ.ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

ராசிபுரம் அருகேயுள்ள தொ. ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளானதைத் தொடா்ந்து பவள விழா வெள்ளிக்கிழமை நடைப... மேலும் பார்க்க