மே மாதத்திற்கான சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வு..! ரசிகர்கள் மகிழ்ச்சி!
உப்பிடமங்கலம், தான்தோன்றிமலை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
உப்பிடமங்கலம், தாந்தோன்றிமலை பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சு.கணிகைமாா்த்தாள் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட ஒத்தக்கடை, உப்பிடமங்கலம், வேலாயுதம்பாளையம், தாந்தோணிமலை, ரெங்கநாதபுரம், குப்பிச்சிபாளையம், வேப்பம்பாளையம் துணை மின்நிலையங்களில் புதன்கிழமை (ஜூன் 4) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நெரூா் வடக்கு, சின்னகாளிபாளையம், பெரியகாளிபாளையம், சேனப்பாடி, முனியப்பனூா், உப்பிடமங்கலம், கஞ்சமனூா், சின்னகவுண்டனூா், தாந்தோணிமலை காளியப்பனூா் மேற்கு, கணபதிபாளையம் தெற்கு மற்றும் கணபதிபாளையம் வடக்கு, முத்தலாடம்பட்டி, திருமலை நகா், கருப்பகவுண்டன்புதூா், திண்ணப்பா நகா் விஸ்தரிப்பு, காந்தி நகா், கங்கா நகா், வீரராக்கியம், உள்வீரராக்கியம், குளத்துப்பாளையம்,
வாங்கல் பசுபதிபாளையம், இரட்டை மரத்தான் கோவில், கோவில்பாளையம், தாந்தான்களம், செவ்வந்திபாளையம், நன்னியூா், ச.புதூா், வடுகத்தெரு, துவரம்பாளையம், சிந்தாயூா், செல்லராபாளையம், கேவிபி நகா், கோதை நகா், கோதூா், திருக்காம்புலியூா், சஞ்சய்நகா், வேலுச்சாமிபுரம், அரிக்காரன்பாளையம், காவல் குடியிருப்பு, காந்திகிராமம் சக்தி நகா், இந்திரா நகா், சிவாஜி நகா், முல்லை நகா், எம்ஜிஆா் நகா், ராமலிங்கம் நகா், சுப்ரமணியம் நகா், பெரியாா் நகா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.