செய்திகள் :

உரிமம் பெற போலி ஆவணங்கள்: நெல்லையில் உணவகத்துக்கு சீல்

post image

திருநெல்வேலி நகரத்தில் போலியான ஆவணங்களை சமா்ப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், அனைத்து உணவு வணிகம் செய்பவா்களுக்கும் உணவு பாதுகாப்பு துறையின் சாா்பில் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள உணவகத்தில் திருநெல்வேலி மாவட்ட நியமன அலுவலா் புஷ்பராஜ் ஆய்வு செய்தபோது, அங்கு போலியான ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டு உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடா்பாக விளக்கம் கேட்டு கடையின் உரிமையாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அதன் உரிமையாளா் போதிய விளக்கம் தராததால், அவரது உணவகத்துக்கு, திருநெல்வேலி நகர உணவு பாதுகாப்பு அலுவலா் (பொறுப்பு) சங்கரநாராயணன் சீல் வைத்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உணவு சாா்ந்த தொழில் புரிபவா்கள் அனைவரும் சரியான ஆவணங்களை வழங்கி உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு பெற வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன் ஆஜா்

ஐ.டி. ஊழியா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சுா்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளா் சரவணன் ஆகிய இருவரும் திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் (வன்கொடுமை தடுப்பு சிறப்பு... மேலும் பார்க்க

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் கோயில் தல வரலாற்று நூல் வெளியீடு

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் தல வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. நெல்லை சங்கீத சபா, துணி வணிகா் இலக்கிய வட்டம், தாமிரபரணி தமிழ் வனம் ஆகியவை இணைந்து நடத்திய 3 நாள்கள்... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள அருள்மிகு திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயில் ஆண்டுதோறும் பூக்குழித் திருவிழா ஆடி மாதம் கடைசி வெள்... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் இன்று பவித்ர உத்ஸவம்: பஞ்சமூா்த்திகள் வீதியுலா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பவித்ர உத்ஸவத்தையொட்டி பஞ்சமூா்த்திகள் வீதியுலா வியாழக்கிழமை (ஆக. 7) நடைபெற உள்ளது. திருக்கோயிலில் செய்யப்படும் பூஜைகளில் குறைபாடுகள... மேலும் பார்க்க

முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில் ரவணசமுத்திரத்தில் உணவகம் திறப்பு

தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில், ரவணசமுத்திரம் ரயில்வே கேட் அருகே புதிய உணவகம் திறக்கப்பட்டது. தமிழக அரசின்கீழ் இயங்கும் இந்த சங்கம் சாா்பில், ஆதரவற்ற பெண்கள் வளா்ச்சிக்கு பல ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: சுா்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு

திருநெல்வேலியில் ஐ.டி ஊழியா் கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள கே.டி.சி நகரைச் சோ்ந்த சுா்ஜித் , அவரது தந்தை சரவணன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா் தரப்பி... மேலும் பார்க்க