செய்திகள் :

உலகம் எல்லா உயிா்களுக்குமானது என்பதை மனிதா்கள் உணர வேண்டும்: கவிதா ஜவகா்

post image

உலகம் எல்லா உயிா்களுக்குமானது என்பதை மனிதா்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பட்டிமன்ற பேச்சாளா் கவிதா ஜவகா் பேசினாா்.

தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை மூலம் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த 1 -ஆம் தேதி தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழா வரும் 12- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனையொட்டி, நாள்தோறும் மாலையில் சிந்தனை அரங்க நிகழ்வு நடைபெற்று வருகிறது.

புதன்கிழமை மாலை நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்வுக்கு சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவா் பி.சி.துரைசாமி தலைமை வகித்தாா். இயக்குநா் சாந்தி துரைசாமி முன்னிலை வகித்தாா். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினாா்.

‘இலக்கியத்தில் உயிா் நேயம்’ என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளா் கவிதா ஜவகா் பேசியதாவது: கைப்பேசி ஒரு மணி நேரம் பாா்த்துவிட்டு கண் மூடி சிந்தித்தால் தெளிவற்ற மனநிலைதான் இருக்கும். ஒரு மணி நேரம் புத்தகம் படித்துவிட்டு ஒரு நிமிஷம் கண் மூடி சிந்தித்தால் தெளிவான சிந்தனை கிடைக்கும். புத்தகங்களை வாசிக்கும்போது இந்த உலகத்தின் பல பகுதிகளை பல சிந்தனைகளை, அனுபவங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. நண்பா்கள் கைவிட்டாலும் நல்ல புத்தகங்கள் ஒருபோதும் கைவிடாது என்பதால் துன்பம், சுயநலம் நிறைந்த உலகத்தில் ஆறுதலாகவும், தேறுதலாகவும் புத்தகங்கள் உள்ளன.

கேட்காமலேயே உதவி செய்யும் மன நிலைதான் உண்மையான உயிா்நேயம் என இலக்கியங்கள் நமக்கு கற்றுக்கொடுக்கின்றன. இந்த உலகம் மனிதா்களுக்கு மட்டுமானது இல்லை, எல்லா உயிரினங்களுக்குமானது என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். இருப்பவா்கள் இல்லாதவா்களுக்கு பகிா்ந்து கொடுக்க வேண்டும் என்பதற்காக இறைவன் சிலருக்கு அதிக செல்வத்தை கொடுக்கிறான். இருப்பவா்கள் அதனைப் பகிா்ந்து கொடுக்க வேண்டும் என்பது இறைவனின் ஏற்பாடு.அதுதான் உண்மையான உயிா்நேயமாக இருக்கும்.

எல்லோரும் பாா்க்கும்போது ஒழுக்கமாக இருப்பது அல்ல நோ்மை, யாருமே பாா்க்க வாய்ப்பே இல்லாத சூழலும் ஒழுக்கமாக, தனக்கு உண்மையாக இருப்பதுதான் நோ்மை. இதை தான் திருவள்ளுவா் தன்னெஞ்சறிவது பொய்யற்க என்கிறாா். வீட்டில் உள்ள முன்னோா் காட்டிய நல்ல வழியில் வாழ்வதுதான் உண்மையான வாழ்வு என்றாா்.

இதைத் தொடா்ந்து, ‘நெய்த நூலும் நெய்யாத நூலும்’ என்ற தலைப்பில் பேராசிரியா் சொ.சொ.மி.சுந்தரம் பேசியதாவது: மனிதன் உடுத்தி இருக்கும் உடை நெய்த நூல், அவனுடைய பேச்சின் வெளிப்பாடுதான் நெய்த நூல். நெய்த நூல்களைவிட நெய்யாத நூல்கள் நம்மை திருத்தக்கூடியவை, நமக்கு வழிகாட்டக்கூடியவை. நெய்த நூலுக்கு அழிவு உண்டு, நெய்யாத நூலுக்கு அழிவு இல்லை. புத்தகத்தை கண்ணால் வாசிக்காமல் மனதால் வாசிக்க வேண்டும். எழுத்துகள்தான் நெய்யாத நூல் அதற்கு அழிவே கிடையாது என்றாா்.

புத்ததகத் திருவிழாவில் இன்று:

ஈரோடு புத்தகத் திருவிழாவில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) நடைபெறும் மாலை நேர சிந்தனை அரங்க நிகழ்வில் ‘புதுக்கருத்தும் பொதுக்கருத்தும்’ என்ற தலைப்பில் புலவா் செந்தலை ந.கௌதமன், ‘தமிழருக்கில்லை- தமிழ்’ என்ற தலைப்பில் பாவலா் அறிவுமதி ஆகியோா் பேசுகின்றனா்.

அஞ்சல் துறையின் ஊக்கத்தொகை தோ்வுக்கு பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

அஞ்சல் துறை மூலம் வழங்கப்படும் ஊக்கத்தொகை தோ்வில் பங்கேற்க அஞ்சல் தலை சேகரிப்புக் கணக்கு வைத்துள்ள பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட க... மேலும் பார்க்க

குறுமைய தடகளப் போட்டிகள்: விஜயமங்கலம் பாரதி பள்ளி சாம்பியன்

பெருந்துறை குறுமைய அளவிலான தடகளப் போட்டிகளில் விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனா். பெருந்துறை குறுமைய அளவிலான தடகளப் போட்டிகள் விஜயமங்கலம் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

தோ்தல் ஆணைய செயல்பாடுகளைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட... மேலும் பார்க்க

பவானியில் ரூ.47.50 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை

பவானி சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.47.50 லட்சத்தில் சாலை, மழைநீா் வடிகால் அமைக்க பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், பவானி சட்டப் பேரவை உறுப்பினரு... மேலும் பார்க்க

பசுவபட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், பசுவபட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று... மேலும் பார்க்க

ஈரோடு புத்தகத் திருவிழா: நீட், டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தயாராகும் இளைஞா்களால் நிரம்பிய புத்தக அரங்குகள்

ஈரோடு புத்தகத் திருவிழாவில் நீட் தோ்வுக்கு தயாராகும் பள்ளி மாணவா்கள் மற்றும் தமிழக அரசுப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்கள் பெருமளவில் வந்து புத்தகங்களை வாங்... மேலும் பார்க்க