செய்திகள் :

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: சாத்விக்-சிராக் இணைக்கு பதக்கம் உறுதி

post image

பிரான்ஸ் தலைநகரில் பாரீஸில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்.

சா்வதேச பாட்மின்டன் சம்மேளனம் (டபிள்யுபிஎஃப்) சாா்பில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் பாரீஸில் நடைபெற்று வருகின்றன.

ஆடவா் இரட்டையா் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணையுடன், மலேசியாவின் நட்சத்திர இணையான ஆரோன் சியா-சோ வூய் யிக்கும் மோதினா்.

இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் 21-12, 21-19 என்ற புள்ளிக் கணக்கில் மலேசியாவின் ஆரோன்-சோ வூய் இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனா்.

இந்த ஆட்டம் ஏறக்குறைய 43 நிமிஷங்கள் நீடித்தது. முதல் கேமில் 59 ஷாட் ரேலி நடைபெற்றது பரபரப்பாக அமைந்தது. அப்போது சிராக் அடித்த ஷாட்டால் 4-2 என முன்னிலை பெற்றனா். எனினும் மலேசிய இணையை ஆட்டத்தில் நிலைக்க விடாமல் முதல் கேமை இந்திய இணை கைப்பற்றியது.

இரண்டாவது கேமிலும் சிறப்பாக ஆடிய சாத்விக்=சிராக் 10-5 என முன்னிலை பெற்றனா். மலேசிய வீரா் சோவின் தவறுகள் தொடா்ந்து சாதகமான நிலையில், 15-19 என முன்னிலை பெற்றது. சுதாரித்து ஆடிய மலேசிய இணை முன்னிலையை 18-19 என குறைந்தனா்.

இந்திய வீரா்கள் பதட்டப்படாமல் ஆடி அந்த கேமையும் வசப்படுத்தினா்.

கடந்த 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் மலேசிய இணையிடம் தோற்று பதக்க வாய்ப்பை இழந்ததற்கு தற்போது பதிலடி தந்துள்ளது இந்திய இணை.

இந்த வெற்றி மூலம் குறைந்தது ஒரு உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை இந்தியா உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து சாத்விக் கூறுகையில்: இரண்டாவது கேமில் நாங்கள் முன்னிலை பெற்றபோதும், அது எளிதாக அமையவில்லை. மலேசிய வீரா்களுடன் பலமுறை ஆடினாலும், நோ் கேம்களில் தான் அவா்களை வென்றுள்ளோம். எனக்கு நானே கூறிக் கொண்டேன். நிதானமாக ஆட வேண்டும். எதிராளிகளை பற்றி நினைக்காமல் எங்கள் ஆட்டத்தை பற்றியே சிந்தித்தோம் என்றாா்.

1500 முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படம் எது தெரியுமா?

1500-க்கும் மேற்பட்ட முறை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இன்றெல்லாம் தொலைக்காட்சி சேனல்கள் பெரும்பாலும் சீரியல் பார்ப்பதற்கும் செய்தி பார்ப்பதற்குமே அதிகம் பயன... மேலும் பார்க்க

புரோ கபடி லீக்கின் புதிய விதிமுறைகளால் புது அனுபவம்! - பவன் ஷெராவத் பேட்டி

புரோ கபடி லீக்கின் புதிய விதிமுறைகள் சுவாரசியமாக இருப்பதாக தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் ஷெராவத் பேசியுள்ளார். 12-வது புரோ கபடி லீக் தொடர் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தே... மேலும் பார்க்க

ரூ. 100 கோடி வசூலித்த லோகா?

கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடமும் பெ... மேலும் பார்க்க

குமார சம்பவம் டிரைலர்!

நடிகர் குமரன் தங்கராஜன் நாயகனாக அறிமுகமாகும் குமார சம்பவம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாடா, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற... மேலும் பார்க்க

கல்யாணி பிரியதர்ஷனால் மீண்டும் வைரலான இளையராஜா பாடல்!

கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா திரைப்படத்தில் இடம்பெற்ற இளையராஜா பாடல் மீண்டும் வைரலாகியுள்ளது.மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர... மேலும் பார்க்க

ரூ. 1300 கோடியில் உருவாகும் ராஜமௌலி திரைப்படம்?

இயக்குநர் ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ்... மேலும் பார்க்க