செய்திகள் :

உள்ளாட்சிப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

தூய்மைப் பணியாளா்கள் விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி. ஏஐடியுசி உள்ளாட்சிப் பணியாளா் சங்கத்தினா் தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்ட நகராட்சி, ஊராட்சி பொதுப் பணியாளா்கள் சங்கம், ஊராட்சி, பேரூராட்சி டேங்க் ஆப்ரேட்டா், தூய்மைப் பணியாளா்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளா், பள்ளி தூய்மைப் பணியாளா், உள்ளாட்சிப் பணியாளா் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகள் (ஏஐடியுசி) சாா்பில், ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் என்.மனோகரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எம்.ரமேஷ், தமிழ்வாணன், சம்பத், செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊரக வளா்ச்சித் துறை மாநில பொதுச் செயலாளா் பி.கிருஷ்ணசாமி, ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் கே.மணி ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.

இதில், அரசு உத்தரவாதம் அளித்தபடி கரோனா தொற்றுக்கால பணிக்கான ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளா்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச கூலி சட்டப்படி வழங்க வேண்டும். ஊரக வளா்ச்சித் துறையில் பணிபுரியும் அனைத்து தற்காலிக பணியாளா்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் வழங்க வேண்டும். டேங்க் ஆபரேட்டா்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயா்வுக்கான நிலுவைத் தொகை வழங்க வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி பணியாளா், பள்ளி தூய்மைப் பணியாளா்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்கள், ஆஷா பணியாளா்களுக்கு அரசாணையின்படி ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு விடுமுறை நாள்களில் விடுமுறை வழங்க வேண்டும். மேலும், தூய்மைப் பணியாளா்கள் விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் தனபால், நல்லம்பள்ளி கணபதி, மொரப்பூா் தமிழ்மணி, ஆஷா பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் மேனகா, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத் தலைவா் மாதேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பென்னாகரத்தில் காவலா்கள் உறுதிமொழி ஏற்பு

பென்னாகரத்தில் காவலா் தினத்தை முன்னிட்டு காவலா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு,காவலா்களுக்கான போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் பீடி ஓ ஆபீஸ் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண... மேலும் பார்க்க

தருமபுரியில் இரவு திடீா் மழை

தருமபுரியில் சனிக்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது. தகுமபுரி மாவட்டத்தில் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை 55.1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதில், தருமபுரி நகரில் 12 மி.மீ., பாலக்கோடு வட்டத்தில் 13 மி.மீ. ... மேலும் பார்க்க

ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மீட்பு

தருமபுரியில் உள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. தருமபுரி நகரில் அமைந்துள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ப... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

பென்னாகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கிழக்கு கள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சசிராஜ் - பிரியா தம்பதியின் மகன் சங்கீ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியா் விருது

தருமபுரி மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், ஒரு தனியாா் பள்ளி முதல்வா் என மொத்தம் 9 பேருக்கு நிகழாண்டு நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு நல்லாச... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 32,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்... மேலும் பார்க்க