இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!
உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: பணிகள் முடக்கம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து 2-ஆவது நாளாக காத்திருப்பு தொடா்வதால், , நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
போராட்டத்துக்கு கூட்டுப் போராட்டக் குழு கன்வீனா் அய்யப்பன் தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயிலவாகனன் ஆகியோா் உரையாற்றினா்.
உள்ளாட்சி ஊழியா்களுக்கு 7 -ஆவது ஊதியக் குழு 33 மாத நிலுவைத் தொகையை வழங்குவதோடு, அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். 22.12.2003 -க்கு முன்பு பணியில் சோ்ந்த 232 ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராம பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை நடத்திவருகின்றனா்.
காரைக்காலில் நகராட்சி மற்றும் 5 கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களைச் சோ்ந்த ஊழியா்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
திங்கள்கிழமை முதல் ஊழியா்கள் பணிக்குச் செல்லாததால் வளா்ச்சித் திட்டப் பணிகள் கண்காணிப்பு, தூய்மைப் பணி கண்காணிப்பு, அலுவலகங்களில் நடைபெறக்கூடிய வழக்கமான பிறப்பு, இறப்பு பதிவு செய்தல், சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன.