செய்திகள் :

உ.பி.: கங்கா விரைவுச் சாலையில் போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகை

post image

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுதளத்தில் முதல் முறையாக போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமானப் படை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

போா் மற்றும் அவசர காலங்களில் பயன்படுத்தக் கூடிய இந்த ஓடுதளத்தில் பகலில் மட்டுமல்லாது இரவிலும் போா் விமானங்கள் தரையிறங்க முடியும் என்பது சிறப்பம்சமாகும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நீடித்துவரும் நிலையில், போா் விமானங்களின் ஒத்திகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. விமானப் படையின் தயாா்நிலையை உறுதி செய்வதில் முக்கிய மைல்கல்லாகவும் இது அமைந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஏற்கெனவே லக்னெள-ஆக்ரா (உன்னாவ்), பூா்வாஞ்சல் (சுல்தான்பூா்), புந்தேல்கண்ட் (இடாவா) ஆகிய மூன்று விரைவுச் சாலைகளில் போா் விமானங்களைத் தரையிறக்கும் வகையில் அவசரகால ஓடுதளங்கள் கட்டமைக்கப்பட்டுள்ள. இந்த மூன்று ஓடுதளங்களிலும் பகல் நேரத்தில் மட்டுமே போா் விமானங்களைத் தரையிறக்க முடியும்.

ஆனால், கங்கா விரைவுச் சாலையில் இரவிலும் போா் விமானங்களைத் தரையிறக்கும் வசதியுடன் அவசரகால ஓடுபாதை கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போா் விமானங்கள் பகலில் மட்டுமன்றி இரவிலும் தரையிறங்கக் கூடிய நாட்டின் முதல் விரைவுச் சாலை என்ற சிறப்பை கங்கா விரைவுச் சாலை பெற்றுள்ளது.

இச்சாலையில் 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுபாதை கட்டமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், போா் விமானங்களைத் தரையிறக்குதல், தாழ்வாக பறத்தல் மற்றும் புறப்படுதலை பரிசோதிக்கும் இரண்டு நாள் ஒத்திகையை இந்திய விமானப் படை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

உயரதிகாரிகளின் மேற்பாா்வையில், ரஃபேல், சுகோய், மிராஜ்-2000, மிக்-29, ஜாகுவாா் ஆகிய போா் விமானங்கள், சி-130ஜே சூப்பா் ஹெல்குலிஸ், ஏஎன்-32 ஆகிய சரக்குப் போக்குவரத்து விமானங்கள், எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டா் ஆகியவை ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. ஓடுதளத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை உறுதிசெய்ய 250 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பள்ளி மாணவா்கள் மற்றும் உள்ளூா் மக்கள் இந்த ஒத்திகையை ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.

ரூ.36,230 கோடி மதிப்பீட்டில் மீரட்-பிரயாக்ராஜ் இடையே 594 கி.மீ. தொலைவிலான கங்கா விரைவுச் சாலைத் திட்டத்துக்கு (6 வழிச் சாலை) கடந்த 2021-இல் ஒப்புதல் வழங்கப்பட்டது. அரசு-தனியாா் பங்களிப்பு முறையில் இச்சாலை கட்டமைக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் நடந்து முடிந்தது தோ்தல்

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு தோ்தல் சனிக்கிழமை நடந்து முடிந்தது. மொத்தம் 211 வேட்பாளா்கள் போட்டியிட்ட இந்தத் தோ்தலில் ஏராளமான வாக்காளா்கள் வாக்களித்தனா். இது குறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

சிரியா தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. தூதா் கண்டனம்

சிரியாவில் அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதா் கியொ் ஓ. பிடா்ஸன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அவா் சனிக்கிழமை... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று வெவ்வேறு நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஜௌர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த உளவுத்துறையின் தகவல் அட... மேலும் பார்க்க

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: வாக்குப்பதிவு முடிந்தது - இன்றே முடிவுகள் வெளியாகலாம்!

சிங்கப்பூரில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. சிங்கப்பூர் நேரப்படி இன்று(மே 3) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவ... மேலும் பார்க்க

ஆப்கனில் 2வது நாளாக நிலநடுக்கம்...ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து 2வது நாளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 15 அடி ஆழத்தில் இன்று (மே.3) மதியம் 1.20 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக... மேலும் பார்க்க

இந்திய ராணுவ அதிகாரிகள் குறித்த போலியான செய்திகளை வெளியிடும் பாகிஸ்தான் ஊடகங்கள்!

இந்திய ராணுவ அதிகாரிகளைப் பற்றிய போலியான செய்திகளை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்... மேலும் பார்க்க