செய்திகள் :

உ.பி: ரமலான் நோன்பு தொடங்க காத்திருந்த இளைஞர் சுட்டுக் கொலை... போலீஸ் விசாரணை!

post image

உத்தரப்பிரதேச மாநிலம், அலிகர் என்ற இடத்தைச் சேர்ந்த ஹாரீஸ் என்ற கட்டா என்பவர் தனது வீட்டிற்கு வெளியில் அதிகாலை 3.15 மணிக்கு நின்று கொண்டிருந்தார். அவர் முன்னதாக கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்திருந்தார். அதிகாலையில் ரம்ஜான் நோன்பு தொடங்க இருந்தது. நோன்பு தொடங்குவதற்கு முன்பு சாப்பிடுவதற்காக காத்திருந்தார். சாப்பிடுவதற்கு சிறிது நேரம் இருந்ததால் அந்நேரம் வீட்டிற்கு வெளியில் வந்து தனது நண்பர் ஒருவருடன் நின்று கொண்டிருந்தார். அந்நேரம் இரண்டு பைக்குகளில் நான்கு பேர் அந்த வழியாக வந்தனர். ஹாரீஸுடன் நின்று கொண்டிருந்த நபர் அங்கு இருந்த படிக்கட்டில் அமர சென்றார். அப்போது பைக்கில் வந்தவர்கள் ஹாரீஸ் அருகில் தங்களது பைக்கை கொண்டு வந்தனர். முதல் பைக்கில் பின்புறம் இருந்த நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ஹாரீஸை சுட முயன்றார். உடனே ஹாரீஸ் தன்னை பாதுகாத்துக் கொள்ள முயன்றார்.

ஆனால் அதற்கு முன்பாக பைக்கில் வந்த நபர் இரண்டு முறை தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டார். இதில் ஹாரீஸ் கீழே விழுந்தார். முதல் பைக்கில் இருந்தவர்கள் தப்பிச்சென்ற நிலையில் இரண்டாவது பைக்கில் பின்புறம் இருந்த நபர் வந்து மூன்று முறை ஹாரீஸ் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுவிட்டார். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் இக்காட்சி பதிவாகி இருந்தது. இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து ஹாரீஸை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ஹாரீஸ் ஏற்கெனவே இறந்துவிட்டார். இது குறித்து போலீஸார் கூறுகையில், ``முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்துள்ளது. கொலைக்கான வேறு காரணங்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

சென்னை: `உனக்கு உன் மனைவி செய்வினை வைத்திருக்கிறாள்' - டெலிவரி ஊழியரை ஏமாற்றிய பெண்

சென்னை ஓட்டேரி, பாஷ்யம் 2-வது தெருவில் வசித்து வருபவர் அக்பர் (33). இவர் சிக்கன் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இந்தச் சூழலில் அக்பர் தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ஆச... மேலும் பார்க்க

``பள்ளி ஆசிரியர்கள் கையில் சிறு கம்பு வைத்திருக்க வேண்டும்'' - கேரள ஐகோர்ட் கருத்து

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் கம்பால் அடித்ததாக மாணவனின் பெற்றோர் அளித்த புகாரால், விழிஞ்ஞம் போலீஸார் வழக... மேலும் பார்க்க

PWD: `ரூ.1.50 லட்சம் கையாடல்' - 40 ஆண்டுகள் கழித்து பொதுப்பணித்துறை அதிகாரிக்கு தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம், மூட்டம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆரணி குளத்தில் கடந்த 1984-85 -ஆம் ஆண்டில் கலிங்கு வெட்டியதில் ரூ.1,51,000 கையாடல் செய்ததாக கடந்த 1987 -ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால... மேலும் பார்க்க

சென்னை: மதியம் அடிதடி; இரவில் கொலை - இளைஞரைக் கொலை செய்த ரௌடியின் பின்னணி

சென்னை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரின் மனைவி ஜெயந்தி. ராஜா தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை, பாரதியார் தெரு சந்திப்பு பகுதியில் நேற்று நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மூன்ற... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: பள்ளிக்குச் சென்ற 3-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை - போக்சோவில் இளைஞர் கைது!

தஞ்சாவூர், வல்லம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (30). இவர் கடந்த 11-ம் தேதி தனது டூவீலரில் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் சாலையோரத்தில், பள்ளிக்கு செல்வதற்காக மூன்றாம் வகுப்பு படிக... மேலும் பார்க்க

`ஒரே ஸ்டேஷனில் 13 போலீஸார் பணியிட மாற்றம்' - திருச்சி எஸ்.பி அதிரடி.. காரணம் என்ன?

திருச்சி மாவட்டம், கரூர் சாலையில் உள்ளது ஜீயபுரம். இங்குள்ள காவல் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக உள்ள... மேலும் பார்க்க