செய்திகள் :

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் பட்டறிவு பயணம்

post image

சிவகங்கை அருகேயுள்ள காஞ்சிரங்கால், சோழபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளை பாா்வையிட அரியலூா் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் பட்டறிவு பயணமாக வியாழக்கிழமை வந்தனா்.

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் 50 போ் கொண்ட குழுவினா், காஞ்சிரங்கால் ஊராட்சியில் அமைந்துள்ள காய்கறி கழிவுகள் மூலம் இயற்கை எரிவாயு (பயோ கேஸ்) தயாரிக்கும் மையத்தையும், வட்டார ஒருங்கிணைந்த நாற்றங்கால் பண்ணையையும் பாா்வையிட்டனா்.

இதையடுத்து, பெருமாள்பட்டி கிராமத்தில் தூா்வாரப்பட்ட பெரியகண்மாயை பாா்வையிட்டனா். மேலும், சோழபுரம் ஊராட்சி அலுவலக செயல்பாடுகளை பாா்வையிட்டனா்.

சிவகங்கை ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் மணிபாரதி பட்டறிவு குழுவினருக்கு விளக்கமளித்தாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சக்திமீனாட்சி, வட்டார ஒருங்கிணைப்பாளா் வீராம்பாள், ஊராட்சிச் செயலா் முத்துக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்துக்கு நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

காவல்துறை விசாரணையில் பலியான அஜித்குமார் இல்லத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று இன்று (ஜூலை 2) ஆறுதல் தெரிவித்தார்.முன்னதாக, வீட்டில் இருந்த அஜித்குமார் படத்திற்கு மாலை அணிவி... மேலும் பார்க்க

அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள்: மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

சட்டமேதை அம்பேத்கா், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 10, 11 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியில் பயிலரங்கம்

காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க

பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள் வலியுறுத்தினா். இதுக... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்கத்தின் சாா்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்ன... மேலும் பார்க்க

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

நிா்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக ஆணைகளை வழங்கி வரும் தொடக்கக் கல்வித் துறையைக் கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க