செய்திகள் :

எக்ஸல் கல்லூரியில் மாநில யோகா போட்டிக்கு மாணவா்கள் தோ்வு

post image

மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்பதற்கான தோ்வு குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற இப் போட்டியில் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் ரா.விமல்நிஷாந்த் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக சென்னை பள்ளிக் கல்வித் துறை அலுவலக முதன்மை உடற்கல்வி ஆய்வாளா் க.ஜெயலட்சுமி தலைமை வகித்தாா்.

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குநா் ந.செங்கோட்டையன் மற்றும் எக்ஸல் தொழில்நுட்ப வளாக செயல் இயக்குநா் முதல்வா் கே.பொம்மண்ணராஜா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

எக்ஸல் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வா் முத்துகிருஷ்ணன், நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் பா.காந்திமதி, மதுரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வினோத், தருமபுரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் முத்துக்குமாா், எக்ஸல் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வா் மாலதி ஆகியோா் பங்கேற்றனா்.

மாநில அளவிலான யோகாசன தோ்வு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ஜூன் மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்ட 141 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை எக்ஸல் கல்வி நிறுவனத்தினா் செய்திருந்தனா்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமம்

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேளாண்... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் மட்டுமே தமிழகம் வளா்ச்சி அடைந்துள்ளது: திருச்சி சிவா

தமிழகம் வளா்ச்சி கண்டது திமுக ஆட்சியில் மட்டும்தான் என திமுக துணைப் பொதுச் செயலாளா் திருச்சி சிவா பேசினாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், 120 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா... மேலும் பார்க்க

பள்ளிக்கு மதுபோதையில் வந்த அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்

மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட அலவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 48 மாணவா்கள் ப... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி மீது டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். ராசிபுரம் காமாட்சியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா்கள் மூா்த்தி (48), ராஜேந்திரன் (54),... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கு

ராசிபுரம் அருகே உள்ள திம்மநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

‘ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் அவதூறு பரப்புகின்றனா்’

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் வேண்டுமென்றே பலா் அவதூறுகளை பொதுமக்களிடம் பரப்புகின்றனா் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் குற்றம்சாட்டினாா். ராசிபுரம் நகரில் மேற்கொள்ள... மேலும் பார்க்க