செய்திகள் :

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தடை நீட்டிப்பு!

post image

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய உயர் நீதிமன்றம் விதித்தத் தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், அவர்கள் சாப்பிட்ட இலையில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்யவும் அனுமதிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, எச்சில் இலையில் அங்கபிரதட்சணத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்தாண்டு, மே 18-ஆம் தேதி அங்கு எச்சில் இலையில் அங்கபிரதட்சண நிகழ்வு நடைபெற்றது.

இதனிடையே, எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, கரூர் மாவட்ட ஆட்சியர், வருவாய்க் கோட்டாட்சியர், மண்மங்கலம் வட்டாட்சியர், திருவண்ணாமலையைச் சோ்ந்த அா்ச்சகர் அரங்கநாதன் ஆகியோா் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அப்போது இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், ”சென்னை உயா்நீதிமன்ற அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறாக இருந்தாலும், அதை தனி நீதிபதி பின்பற்ற வேண்டும். இல்லையெனில், இந்த வழக்கை வேறு பெரிய அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்ற தனி நீதிபதி பரிந்துரைக்கலாம். அமர்வு நீதிமன்ற உத்தரவு செல்லாது என தனி நீதிபதி கூறுவது ஏற்புடையதல்ல. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.” என்றனர்.

இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று(மே 5) விசாரணைக்கு வந்த நிலையில், ”இச்சடங்கு ஒரு வழிபாடு, அனைத்து சாதியினரும் எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்கின்றனர்” என்ற நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய உயர் நீதிமன்றம் விதித்தத் தடை தொடர்வதாகவும் தெரிவித்தது.

மேலும், கர்நாடக மாநிலம், குக்கோ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இதுபோன்ற சடங்கிற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான வழக்கையும் இணைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த 3 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள... மேலும் பார்க்க

மே 5 வணிகர் நாளாக அறிவிக்கப்படும்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மே 5 ஆம் தேதி வணிகர் நாளாக விரைவில் அறிவிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வணிகர் சங்க கோரிக்கை பிரகடன மாநாடு மதுராந்தகத்தில் இன்று (மே 5) நடைபெற்றது. இதில், முதல்வர... மேலும் பார்க்க

நம்முடைய களம் பெரிது - பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! - முதல்வர்

நம்முடைய களம் பெரிது - அதில் நாம் பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னையில், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற “தம... மேலும் பார்க்க

இதனால்தான் தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்: அன்பில் மகேஸ்

சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 1,008 சம்ஸ்கிருத உரையாடல் ... மேலும் பார்க்க

கோவை - திருப்பூர் எல்லை வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியான சுல்தான்பேட்டை அருகே மல்லேகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் வெடிமருந்து ஆலையில் இன்று (மே 5) பிற்பகல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்டைச் சே... மேலும் பார்க்க

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

60 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ள நிலையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 60 லட்சம் பேருக்கு அடையாள அட்... மேலும் பார்க்க