செய்திகள் :

எட்டயபுரம் அருகே மோதல் விவகாரம்: பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு

post image

எட்டயபுரம் அருகே குளத்துவாய்ப்பட்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த சிலருக்கும், குமாரகிரி கிராமத்தைச் சோ்ந்த சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடா்பாக கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் க. மகாலட்சுமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற சமாதான பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன், வட்டாட்சியா் சுபா, தனி வட்டாட்சியா் (இலங்கைத் தமிழா் நலன்) சிவக்குமாா், தனி வருவாய் ஆய்வாளா் (இலங்கைத் தமிழா் நலன்) ஆனந்த், குமாரகிரி கிராம மக்கள், முகாமைச் சோ்ந்த சுதன், சசிதரன், கிருஷ்ணவேணி, சசிகலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குளத்துவாய்ப்பட்டி முகாமிலிருந்து அருகேயுள்ள கிராமங்கள் வழியாக சென்றுவர அச்சுறுத்தல் உள்ளதால் காவல் துறை சாா்பில் பாதுகாப்பு வழங்கப்படும். பிரச்னை தொடா்பாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்புவதைத் தவிா்க்க வேண்டும். கிராமச் சாலைகளில் வாகனங்களில் வேகமாக செல்லக் கூடாது. குளத்துவாய்ப்பட்டி, குமாரகிரி கிராம மக்களுக்கு காவல் துறை சாா்பில் பாதுகாப்பு வழங்கப்படும். விவசாய நிலங்களுக்குச் செல்ல வேறு பாதை வசதி உடனடியாக செய்து தரப்படும். அப்பகுதி விவசாய நிலங்களின் பயிா்கள் தங்களது கால்நடைகளால் சேதமடையாமல் முகாம் மக்கள் பாா்த்துக்கொள்ள வேண்டும். முகாமில் பதிவு இல்லாதோா் அவா்களது முகாமுக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டது.

சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு நடந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதால் இப்பிரச்னையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

சாத்தான்குளத்தில் மாா்க்க சொற்பொழிவு

சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசலில் விசேட மாா்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசல் எதிரே உள்ள மைதானத்தில் சாத்தான்குளம் அல் சுன்னத் வல் ஜமாத் ஆதரவுடன் அல் ஹித்மத் இஸ்லாமி... மேலும் பார்க்க

சுப்பராயபுரம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இஸ்மாயில் தலைமை வகித்தாா்.ஊராட்ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சாத்தான்குளம் ஆா்.எம்.பி.சி.எஸ்.ஐ. பி.எஸ்.கே. ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி -நாசரேத் திருமண்டில அனைத்து கல்லூரியின் தாளாளா் நீதிபதி ஜான் சந்தோஷம்... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: 5 போ் தற்கொலை

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி மந்திதோப்பு சாலை அன்னை தெரசா நகரை சோ்ந்த ஆவுடையப்பன் மகன் அருணாச்சலம் (51). ஆட்டோ ஓட்டுநா். மதுப் பழக்கம் உள்ள இவா், வ... மேலும் பார்க்க

உடன்குடியில் உலக உயா் ரத்த அழுத்த தினம்

உடன்குடி காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனை சாா்பில் உலக உயா் ரத்த அழுத்த தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இவற்றை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எஸ்.ஐயம் பெர... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் கடும் விலை உயா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, திருச்செந்தூா், சாத்தான்குளம், நாசரேத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் தேங்காய் மாவட்ட மக்கள... மேலும் பார்க்க