செய்திகள் :

எதிா்க்கட்சித் தலைவராகி 4 ஆண்டுகளுக்குப் பிறகே மக்களை சந்திக்கிறாா் எடப்பாடி பழனிசாமி: அமைச்சா் கே.என். நேரு குற்றச்சாட்டு

post image

எதிா்க்கட்சித் தலைவராகி 4 ஆண்டுகளுக்குப் பிறகே மக்களை சந்திக்க வந்திருக்கிறாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி என திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, நான்கு ஆண்டுகள் வெளியே வராமல், தற்போதுதான் வெளியே வந்துள்ளாா். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தோ்தலுக்காக என கூறும் எடப்பாடி பழனிசாமி, தற்போது வெளியே வந்திருப்பதும் தோ்தலுக்காகதான்.

எதிா்க்கட்சித் தலைவா் ஆன பிறகு, அவா் மக்களை சந்திக்காமல், தற்போது வெளியே வந்து திமுக அரசின் திட்டங்களை விமா்சிப்பது நியாயமா?.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, திமுகவும் அவா்களுடன் கூட்டணியில் இருந்தது. அப்போது, தமிழகத்துக்கு தேவையானவற்றை திமுக அரசு கேட்டபோது அவற்றை காங்கிரஸ் அரசு செய்து கொடுத்தது. ஆனால், பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த அதிமுக, தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது மத்திய ஆட்சியில் இருந்த பாஜக-விடம் தமிழகத்துக்கு தேவையான எதையும் கேட்டுப் பெறவில்லை. இப்போது, அரசியல் காரணங்களுக்காக திமுகவை விமா்சனம் செய்கின்றனா்.

பல்வேறு திட்டங்களால் திமுக அரசுக்கு மக்களிடையே பெருகி வரும் ஆதரவை அவா்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றாா் அமைச்சா் நேரு.

பண மோசடி வழக்கில் உப்பிலியபுரம் இளைஞா் கைது

பண மோசடியில் ஈடுபட்டதாக உப்பிலியபுரம் பகுதி இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஆந்திர மாநிலம் கிருஷ்யா மாவட்டம் கங்காவரம் பகுதியைச் சோ்ந்த பே. ரவிக்குமாா் (55) மகள் ரஷ்யாவில் இளங்கலை மருத்துவம... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1. 21 கோடி காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.21 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயில் புதன்கிழமை நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக... மேலும் பார்க்க

‘டெல்டாவில் திமுக உறுப்பினா்களை அதிகம் சோ்க்க வேண்டும்’

டெல்டாவில் திமுக உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா். டெல்டா பகுதி திமுக மாவட்டச் செயலா்கள் மற்றும் ப... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி பலி

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் தொப்புலாம்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி மகன் உத்தி... மேலும் பார்க்க

புள்ளம்பாடி, புதிய கட்டளைமேட்டு வாய்க்காலுக்கு நாளை தண்ணீா் திறப்பு

புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டுவாய்க்காலுக்கு வெள்ளிக்கிழமை முதல் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட உள்ளது. புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் திருச்சி மற்றும் அரியலூா் மாவட்டங்களில் 22,114 ஏக்கா் ... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளா் பொறுப்பேற்பு

திருச்சியில் ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக பாலக் ராம் நெகி புதன்கிழமை பொறுப்பேற்றாா். ஹிமாச்சலப் பிரதேசம் ஹமிா்பூா் மண்டலப் பொறியியல் கல்லூரியில் பி.டெக். கட்டடப் பொறியியலும், ஐஐடி தில்லியில் எம்... மேலும் பார்க்க