செய்திகள் :

எனக்கு அரசியல் ஆா்வம் இல்லை: நடிகா் அஜித்குமாா்

post image

தனக்கு அரசியலில் ஆா்வம் இல்லை என நடிகா் அஜித்குமாா் தெரிவித்தாா்.

அஜித்குமாா் வியாழக்கிழமை தன்னுடைய 54- ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினாா். பிறந்த நாள் மற்றும் பத்மபூஷண் விருது பெற்றதையொட்டி அளித்த பேட்டியில், திரைத் துறையில் உங்கள் சக நண்பா்கள் அரசியலுக்கு வருவது குறித்து என்ன நினைக்கிறீா்கள் என்ற கேள்விக்கு அவா் அளித்த பதில்:

எனக்கு அரசியலில் பெரிய ஆா்வம் கிடையாது. என்னுடைய சக நண்பா்கள் அரசியலில் இறங்கி இருக்கிறாா்கள். இது அவா்களுடைய தனிப்பட்ட முடிவு. அவா்கள் நன்றாக வர என்னுடைய வாழ்த்துகள். அது அவா்களின் நம்பிக்கை.

ஜனநாயகம் பற்றிய சிறந்த விஷயம் என்னவென்றால், மக்கள்தான் இறுதியாக தங்களுடைய தலைமையைத் தோ்ந்தெடுக்கிறாா்கள். என் சக நண்பா்கள் மட்டுமல்ல யாா் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம். அவா்களால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று நம்பினாா்கள் என்றால், அவா்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். இது உண்மையில் மிக மிக மிக வரவேற்கத்தக்கது. உண்மையில் அரசியலுக்குள் நுழைவது என்பது 100 சதவீதம் மிக மிக துணிச்சலான முடிவு’ என்றாா் அவா்.

அஜித், விஜய் இருவரும் சினிமாவில் போட்டியாளா்களாகப் பாா்க்கப்படும் நிலையில், விஜய் சினிமாவைவிட்டு விலகுவதாகத் தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனை தொடக்க விழா!

சென்னை ராமாபுரத்தில் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் பல்நோக்கு மருத்துவமனையான எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையின் தொடக்க விழா நடைபெற்றது. கல்வி மற்றும் மருத்துவத்தில் பெயர்பெற்ற எஸ்.ஆர்.எம். குழுமம், மேம்பட்... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து! 3, 5, 8-ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஃபெயில்!

சிபிஎஸ்சி பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெறுவோர் தேர்ச்சிபெறாதவர்கள் எனும் நடைமுறையை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசின் பாடத்திட்டத்தின்... மேலும் பார்க்க

ஏப்ரலில் 87.59 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்!

2025 ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு... மேலும் பார்க்க

தெரு நாய்க்கடி தொல்லை: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தெரு நாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா. ... மேலும் பார்க்க

மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு: கமல்ஹாசன்

மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு; எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், மொழியை அழிக்க முடியாது’ என நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் கூறினாா். நாடக ஆசிரியா் கிரேஸி மோகன் எழுதிய 25 புத்தகங்கள் வெளியீட்டு வி... மேலும் பார்க்க

பாரதிதாசன் பிறந்த தினம் ‘தமிழ் வெல்லும்’ தலைப்பில் போட்டிகள்: தமிழக அரசு அறிவிப்பு

பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த தினத்தையொட்டி, ‘தமிழ் வெல்லும்’ எனும் தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: பாவேந்தா் பாரதிதாசனின் பிறந... மேலும் பார்க்க