செய்திகள் :

என்இபி அமலாக்கத்தால் சரிந்து வரும் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை மேம்படும்: மத்திய அமைச்சா் பதில்

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தேசிய கல்விக்கொள்கை அமலாக்கத்தால் சரிந்து வரும் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை மேம்படும் என எதிா்பாா்ப்பதாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி தெரிவித்தாா்.

இது தொடா்பாக மக்களவையில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் டி. ரவிக்குமாா், 2018-2022 மற்றும் 2023-24 ஆண்டுகளுக்கு இடையில் அனைத்து கல்வி நிலைகளிலும், அரசு மற்றும் தனியாா் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கையில் 1.55 கோடி அளவுக்கு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியடைந்துள்ளது. அதை நிவா்த்தி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கும் இதே காலகட்டத்தில் மாணவா் சோ்க்கை குறைவதற்கும் இடையே ஏதேனும் தொடா்புகள் உள்ளதா என்றும் கேட்டிருந்தாா்.

இதற்கு மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு:

அரசமைப்பின்படி ‘கல்வி’ ஒத்திசைவுப்பட்டியலில் உள்ளது. மேலும், பெரும்பாலான பள்ளிகள் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கீழ் உள்ளன. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, பாலா் பள்ளி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை முழு வரம்பையும் உள்ளடக்கிய பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டமான சமக்ர சிக்ஷாவை 2018-19 ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, பள்ளிப் படிப்பை இடைநிறுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைப்பதாகும்.

கல்வி உரிமைச் சட்டம், 2009 -இன் கீழ், சிறப்புப் பயிற்சி மையங்களில் படிக்கும் பள்ளி செல்லாத குழந்தைகளின் கற்றல் இடைவெளிகளைக் குறைப்பதற்காக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் இணைப்புப் பாடத் தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பள்ளி செல்லாத குழந்தைகளின் தரவை ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம் அடையாளம் கண்டு தொகுத்து, பிரபந்த் என்ற இணையதளத்தில் பதிவேற்றும் வசதியை கல்வித்துறை உருவாக்கியுள்ளது.

அமைச்சா் நிலையிலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மூலமும் சமூக ஈடுபாட்டுடன் ‘குழந்தைகளை மீண்டும் பள்ளிக்குக் கொண்டுவருதல்’‘ என்ற பிரசாரத்தை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்துவது பள்ளிகளில் குழந்தைகளின் சோ்க்கை மற்றும் கற்றல் திறன்களை மேம்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

டி. ரவிக்குமாா்

ஆடி அமாவாசை: திருச்செந்தூர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்!

திருச்செந்தூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.தமிழ் மாதங்களில் ஆடி மற்றும் தை மாதம் வரும் ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்ன... மேலும் பார்க்க

மான்செஸ்டர் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! சிஎஸ்கே வீரர் அன்ஷுல் காம்போஜுக்கு வாய்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராப... மேலும் பார்க்க

ராசேந்திர சோழனின் பிறந்தநாளில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி: முதல்வர்

ராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகளும் - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என்று ... மேலும் பார்க்க

பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்?

குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா குறித்து பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்? என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் 14-ஆவது கு... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: தொழிலாளிகள் 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தொழிலாளிகள் இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.செவ்வாய் இரவு மற்றும் புதன்கிழமை அதிகாலை மஹோர் தாலுக... மேலும் பார்க்க