செய்திகள் :

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர்

post image

இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் ஷெபாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து பிரிட்டன் தூதரக அதிகாரி ஜேன் மேரியட் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் மற்றும் பாகிஸ்தான் பிரிட்டன் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக, பாகிஸ்தானில் உள்ள பிரிட்டன் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:

”பாகிஸ்தான் - இந்தியா மோதலின்போது பதட்டங்களைத் தணிப்பதில் பிரிட்டனின் செயல்பாட்டுக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். மேலும், இந்தியாவுடன் நிலுவையில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த மே 7 ஆம் தேதி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.

இதனைத் தொடர்ந்து, எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் வெடித்தது. மூன்று நாள்கள் நடைபெற்ற மோதல் மே 10 ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு பிறகு நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியிருந்தது.

Pakistani Prime Minister Shehbaz Sharif said on Wednesday that he is ready for meaningful talks with India.

இதையும் படிக்க : பிரதமா் மோடி பிரிட்டன் பயணம் - வா்த்தக ஒப்பந்தம் இன்று கையொப்பம்

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான தீர்மானத்தை மத்திய உள்த... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது’ என்று... மேலும் பார்க்க

பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை: துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் பகுதியில் இருந்து பறந்து வந்த 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கிலோ ஹெராயி... மேலும் பார்க்க

பாலுறவு வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்

பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளாா். இளம் பருவத்தில் சம்மதத்துடன் காதல் உறவுகளில் ஈடுபடுபவா்களையும்... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு ரூ. 2 லட்சம் கோடி வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’

‘இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகியுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’ என்று மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

இந்தியாவில் வேலையில் இருப்போா் எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்வு!

இந்தியாவில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வேலையில் இருப்போா் எண்ணிக்கை 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்ந்துள்ளது என்று மக்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க