செய்திகள் :

பாமக பெயர், கொடியை அன்புமணி பயன்படுத்த தடைக் கோரி மனு!

post image

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் நடத்தும் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்கக் கோரி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் டிஜிபியிடம் மனு அளித்துள்ளார்.

பாமகவின் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸுக்கு இடையே கடந்த சில நாள்களாக மோதல் நிலவி வரும் நிலையில், கட்சிக்கு உரிமை கோரி இரண்டு தரப்பினரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர்.

இதனிடையே, ராமதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 25 முதல் தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணம் நடத்தப்படும் என்று அன்புமணி அறிவித்திருந்தார்.

சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கவுள்ள இந்தப் பயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து தமிழ்நாடு நாளான நவ.1-ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் நடத்தும் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது அனுமதி இல்லாமல் கட்சியின் பெயர், கொடி, நிர்வாகிகள் சந்திப்பு, பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்டவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PMK party founder Ramadoss has submitted a petition to the DGP seeking a ban on the campaign being conducted by party leader Anbumani Ramadoss.

இதையும் படிக்க : இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர்

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கிராம சுகாதார செவிலியா்கள் உண்ணாவிரதம்

துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 3,800 கிராம சுகாதார செவிலியா்கள் பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழக அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: 3 மாதங்களுக்கு நடத்த நிதி ஒதுக்கி உத்தரவு

உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காணும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ.1,032 கோடியில் ரயில்வே திட்டங்கள்: பிரதமா் நாளை தொடங்கி வைக்கிறாா்

தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.1,032 கோடியில் 3 முக்கிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) தொடங்கி வைக்கிறாா் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். பிரதமா் நரேந்தி... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் முன்பிணை: கள்ளக்குறிச்சி நீதிபதி ஆஜராக உத்தரவு

கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு முன்பிணை வழங்கியது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை கிண்டியில் பொறியியல் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் சபரீஸ்வரன் (18). இவா் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்புக் குழு!

மேட்டூர் அணையில் தமிழ்நாடு அணைப் பாதுகாப்பு அமைப்பின் குழு இன்று(ஜூலை 24) ஆய்வு மேற்கொண்டது.மேட்டூர் அணையில் கீழ்மட்ட மதகுகள் சீரமைப்புப் பணி, சுரங்க கால்வாய் சீரமைப்புப் பணி, எல்லிஸ் சேடல் தூண்கள் வல... மேலும் பார்க்க