செய்திகள் :

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் இனிப்புக்கு ஸ்டீவ்யா பொடியை சேர்க்கலாமா? பாதிப்புகள் வராதா?

post image

Doctor Vikatan: சர்க்கரைக்கு மாற்றாக ஸ்டீவ்யா(Stevia)   பவுடர் சேர்த்துக்கொள்ளச் சொல்கிறார்களே... அது என்ன... அதைச் சேர்த்துக்கொண்டால் சர்க்கரையால் வரும் பாதிப்புகள் வராதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்

ஸ்டீவ்யா என்பது ஒருவகை தாவரத்திலிருந்து பெறப்படும் இனிப்புச்சுவை. அதாவது சர்க்கரைத்துளசி அல்லது சீனித்துளசி எனப்படும் செடியிலிருந்து பெறப்படும் இது, சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.

சர்க்கரையைத் தவிர்க்க நினைப்பவர்கள், அதே சமயம், இனிப்பையும் விட முடியாத நிலையில், சர்க்கரைக்கு மாற்றாக ஸ்டீவ்யா பொடியை எடுத்துக்கொள்ளலாம்.  

ஸ்டீவ்யா என்பது சர்க்கரையைவிட பல மடங்கு அதிக இனிப்புச் சுவை கொண்டது. எனவே, மிகக் குறைந்த அளவு பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும். 

ஸ்டீவ்யா பரிந்துரைக்கப்படுவதன் நோக்கமே, சர்க்கரைச் சத்திலிருந்து வெளியே வருவதற்காகத்தான். இதை எடுத்துக்கொள்வதால் பெரிய பாதிப்புகள் வராது. கெமிக்கல் சேர்த்துத் தயாரிக்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகளைச் சேர்த்துக்கொள்வதால்தான் கிட்னி பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதுவும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, இனிப்புக்கு மாற்றாக ஸ்டீவ்யா எடுத்துக்கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சர்க்கரையை அறவே தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தப்படும். அது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பதால், ஆரம்ப நாள்களில் ஸ்டீவ்யா பயன்படுத்த அறிவுறுத்தப்படுவதுண்டு. ஆனால், அவர்களும் இதை நாள்கணக்கில், மாதக்கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது.

Diabetic

சர்க்கரை நோயாளிகள் எந்த வித இனிப்பையும் அறவே தவிர்ப்பதுதான் ஆரோக்கியமானது. எனவே, ஆரம்ப நாள்களில் இனிப்பற்ற உணவுகளுக்குப் பழகும்வரை ஸ்டீவ்யா எடுத்துக் கொண்டாலும், படிப்படியாக இனிப்பிலிருந்து முழுமையாக வெளியே வருவதுதான் அவர்களுக்கான அட்வைஸ்.

ஒரு டீஸ்பூன் சர்க்கரை எடுத்துப் பழகியவர்கள், அதை அரை டீஸ்பூனாக குறைக்கலாம். பிறகு அதை கால் டீஸ்பூனாக குறைக்கலாம். அடுத்து முழுமையாகத் தவிர்த்து விடலாம். இப்படித்தான் அவர்கள் சர்க்கரையை விட்டு வெளியே வர முடியும். அப்படிப் பழகுவதுதான் அவர்கள் உடல்நலத்துக்கு நல்லது. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.      

Kerala: மீண்டும் சர்ச்சை.. மறைந்த தலைவர்கள் குறித்து நடிகர் விநாயகன் பதிவு - என்ன சொல்கிறார்?

கேளாவைச் சேர்ந்த நடிகர் விநாயகன் தனது செயல்பாடுகள் மூலமும், கருத்துகள் தெரிவிப்பதன் மூலமும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். தனது வீட்டு பால்கனியில் நிர்வாணமாக போஸ் கொடுத்து சமீபத்தில் சர்ச்ச... மேலும் பார்க்க

Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது என்ன?

எந்த உணவு ஆர்டர் செய்தாலும், அவை பெரும்பாலும் கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில்தான் நம் வீடுகளுக்கு டெலிவரி ஆகின்றன. பிரியாணியோ, ஃபிரைட் ரைஸோ அல்லது சாம்பார் சாதமோ சுடச்சுட அந்த கருப்பு நிற டப்பாவில... மேலும் பார்க்க

``வெப்பமடிக்கும் அரசியல் சூழலில், பிரதமர் வெளிநாடுகளுக்கு பறக்கிறார்..'' - தமிமுன் அன்சாரி

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இங்கிலாந்திற்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் அவரின் வெளிநாட்டு பயணம் குறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவர்மு.தமிமுன் அன்சாரி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதி... மேலும் பார்க்க

Kerala: வழி நெடுக மக்கள், 22 மணிநேர இறுதி ஊர்வலம்; அரசு மரியாதையுடன் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் தகனம்

கேரள மாநில முன்னாள் முதல்வரும், சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 21-ம் தேதி காலமானார். அவரது உடல் நேற்று முன் தினம் திருவனந்தபுரத்தில் இருந்து ஆலப்... மேலும் பார்க்க

Bihar SIR: ``தேர்தல் ஆணையத்துக்கு நடைமுறை அறிவே இல்லை..'' - JDU MP கடும் தாக்கு

பீகாரில் இன்னும் 4 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் `ஸ்பெஷல் இன்டன்சிவ் ரிவிஷன்’ (SIR) என்ற சிறப்புத் தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.2003-ம் ஆண்ட... மேலும் பார்க்க

``அவர்களின் விளையாட்டைப் புரிந்து கொண்டோம்" -52 லட்ச வாக்காளர் பெயர் நீக்கம் குறித்து ராகுல் காந்தி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பீகாரில் நடந்துவரும் சிறப்பு வாக்காளர் பெயர் திருத்தப் பட்டியலுக்கு எதிர்க்கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்... மேலும் பார்க்க