செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: தொழிலாளிகள் 2 பேர் பலி

post image

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தொழிலாளிகள் இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

செவ்வாய் இரவு மற்றும் புதன்கிழமை அதிகாலை மஹோர் தாலுகா படோரா மலைப் பகுதியில் உள்ள சிவபெருமான் கோயில் அருகே இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கோயிலுக்கு செல்லும் பாதையை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவரும், நிலச்சரிவு ஏற்பட்டபோது ஒரு கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரால் இருவரின் உடல்களும் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு உடல்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் ஒருவர் துலி கலவனைச் சேர்ந்த ரஷ்பால் சிங்(26) மற்றும் மற்றொருவர்செனானியைச் சேர்ந்த ரவிக்குமார்(23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உடல்கூறாய்வுக்கு பின்னர் அவர்களது உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் 3-வது நாளாக முடங்கியது! எதிர்க்கட்சிகள் அமளியால் ஒத்திவைப்பு!

wo men were killed after a landslide triggered by heavy rains hit their tent in Jammu and Kashmir's Reasi district, officials said on Wednesday.

மான்செஸ்டர் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! சிஎஸ்கே வீரர் அன்ஷுல் காம்போஜுக்கு வாய்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராப... மேலும் பார்க்க

ராசேந்திர சோழனின் பிறந்தநாளில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி: முதல்வர்

ராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகளும் - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என்று ... மேலும் பார்க்க

பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்?

குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா குறித்து பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்? என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் 14-ஆவது கு... மேலும் பார்க்க

பெருமுதலாளிகள் மோசடி என்றால் வங்கிகள் கைகளை இறுகக் கட்டிக் கொள்வது ஏன்?: சு.வெங்கடேசன் எம்.பி.

அனில் அம்பானி தொடர்புடைய வங்கி கணக்குகளை “மோசடி” என ஸ்டேட் வங்கி வகைப்படுத்தியுள்ளது. ஆனால்… பல்லாயிரம் கோடி மோசடி பணத்தை 9 ஆண்டுகளாக மீட்கவில்லை. சாமானிய மக்களின் கடன் என்றால் கழுத்தில் துண்டை போட்டு... மேலும் பார்க்க

புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.75 ஆயிரத்தை கடந்து விற்பனை!

வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ. 75,040-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை உயர்வு நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. சென்னையில்... மேலும் பார்க்க

சென்னையில் குழந்தை கழுத்தறுத்து கொலை: உறவினர்கள் போராட்டம்

சென்னை ஓட்டேரியில் குடும்பத் தகராறில் குழந்தையை கழுத்தறுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தையை கைது செய்யக்கோரி தாயின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குழந்தையின் தாயை தந்தை செல்போனில் மிரட்ட... மேலும் பார்க்க