செய்திகள் :

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஜூலை 24) முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்றும் வீசக்கூடும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு வியாழக்கிழமை காலை(ஜூலை 24) 10 மணி வரை நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, புறநகா் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

குறைந்த விலை வீடுகளின் விற்பனை 32% சரிவு

Heavy rain is likely to occur at one or two places in the Nilgiris, Theni, Tenkasi, Kanyakumari, Coimbatore and Tirunelveli districts of Tamil Nadu for the next 3 hours.

மருத்துவர் நம்பெருமாள்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் மதிப்புறு தலைவர் நம்பெருமாள்சாமி மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவரும், கண் ... மேலும் பார்க்க

மருத்துவர் நம்பெருமாள் சாமி மறைவு: சு.வெங்கடேசன் எம்பி இரங்கல்

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவரும், கண் மருத்துவப் பேராசிரியருமான நம்பெருமாள் சாமி மறைவுக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை அரவ... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் முன்பிணை: கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிபதி ஆஜராக உத்தரவு

சென்னை: கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்பிணை வழங்கிய கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.... மேலும் பார்க்க

இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தொடக்கக்கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற 2,457 இடை... மேலும் பார்க்க

2,430 இடைநிலை ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை: துணை முதல்வா் உதயநிதி வழங்கினார்

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தோ்வு செய்யப்பட்ட 2,430 இடைநிலை ஆசிரியா்களுக்கு பணிநியமன ஆணைகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூலை 24) வழங்கினார்.தொடக்க கல்வித் துறையில் இடைநிலை... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: காமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

திருக்குவளை: ஆடி அமாவாசையையொட்டி, காசிக்கு நிகராக புண்ணியம் தரும் காமேஸ்வரத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்.ஆடி அமாவாசையொட்டி, காசிக்கு நிகராக புண்ணியம் தரும் நாகை மாவட்டம் காமேஸ... மேலும் பார்க்க