செய்திகள் :

இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

post image

சென்னை: தொடக்கக்கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணைகளை சென்னை ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்ற விழாவில் துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழகினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு

ஒவ்வொரு மாணவரின் ஒளிமயமான எதிர்காலத்துக்கும் அடித்தளமிடுவது ஆரம்பக்கல்வி. இந்த அடித்தளத்தை மேலும் வலிமையாக்கிட ஆசிரியர் பணியெனும் அறப்பணியை தேர்ந்தெடுத்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்.

இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தின் மூலம் திராவிட மாடல் அரசு, சமூக நீதிக்கான அரசு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

தொடக்கக்கல்வியில் நூறு சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.

100 சதவீதம் பணியிடங்களை நிரப்பியுள்ளோம்

திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீட்டுகின்ற அனைத்து திட்டங்களும் வரலாற்றுச் சாதனையாக விளங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை வரலாற்றில் முதல் முறையாக மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளில் காலிப்பணியிடங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி, நூற்றுக்கு நூறு சதவீதம் இடைநிலை ஆசிரியர்களை நியமித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பணிக்காலம்தான் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம் என முதல்வர் கூறியிருக்கிறார். அது மீண்டும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது என்றார்.

பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் முதல்வர் ஸ்டாலின்

திராவிட இயக்கத்திற்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு பெரிய பந்தம் உள்ளது. 1929 ஆம் ஆண்டே பெண்களை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாக மாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியவர் தந்தை பெரியார். பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்ற பெண்களுக்கு தொடக்கப்பள்ளியில் முன்னுரிமை வழங்கியவர் முத்தமிழறிஞர் கருணாநிதி. இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் கருணாநிதி வழியில் செயல்பட்டு வருகிறார்.

வாழ்க்கையை மாற்றிய கருணாநிதி கையெழுத்து

கருணாநிதி பேனாதான் மத்திய அரசின் ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை, மாநில அரசின் ஊழியர்களுக்கு பெற்றுக்கொடுத்தது. ஒரே ஒரு கையெழுத்து மூலம் 5000 பேர் பணி நியமனம் செய்தவர் கலைஞர். ஆனால் அதேபோல் ஒரு கையெழுத்து மூலம் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியவர் யார் என்று அனைவருக்குமே தெரியும்.

மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘திறன்’ மற்றும் ‘டிஎன் ஸ்பார்க்’ திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளோம்.

‘அகரம்’ மட்டுமின்றி உலகையும் சொல்லித்தருகிற வகையில் அவர்களின் பணி அமையட்டும். ஆசிரியர் சமுதாயத்துக்கு நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என்று துணை முதல்வர் கூறினார்.

2,430 இடைநிலை ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை: துணை முதல்வா் உதயநிதி வழங்கினார்

Deputy Chief Minister Udhayanidhi Stalin said that Tamil Nadu is the only state without 100 percent dropout rate in primary education.

பிரதமர் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருவது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை: அமைச்சர் தங்கம் தென்னரசு

பிரதமர் நரேந்திர மோடி கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருகை தருவது இது தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள பெருமை என அமைச்சர் தங்கம் தென்னரசுசுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சர்வதேச சதுப்பு ந... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.362 கோடி: மத்திய அரசு தகவல்

புதுதில்லி: கடந்த 2021 இல் இருந்து 2024 வரை பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாடு பயணங்களுக்காக ரூ.362 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மாநிலங்களவை... மேலும் பார்க்க

வைகோவின் செயல்பாடுகள் தொடர்ந்திட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

வைகோவின் செயல்பாடுகள் தொடர்ந்திட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும் - புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எம்.... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெள்ளிக்கிழமை (ஜூலை 25) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். தமிழகத்தில் 36 அர... மேலும் பார்க்க

தங்கம் விலை: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.73,680-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையி... மேலும் பார்க்க

புதுச்சேரி: விடுமுறை நாள்களை ஈடுசெய்யும் வகையில் பள்ளி வேலை நாள் அறிவிப்பு

புதுச்சேரியில் கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததை ஈடு செய்யும் வகையில் எதிர்வரும் மாதத்தில் மூன்று சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.புதுச்சே... மேலும் பார்க்க