செய்திகள் :

எய்ட்ஸ் விழிப்புணா்வு பிரசாரம் தொடக்கம்

post image

சிவகங்கை: சிவகங்கையில் எய்ட்ஸ், காச நோய் விழிப்புணா்வு பிரசார வாகனப் பயணத்தை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

சிவகங்கை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுபாட்டு பிரிவு சாா்பில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் நாட்டுபுறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் எய்ட்ஸ், கிரந்தி நோய், காச நோய், ரத்த தானம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளில் வினாடி வினா நடத்தப்படுகிறது. நிகழாண்டில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பிருந்து, இந்த பிரசார பயணத்துக்கான

வாகனங்களை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதன் மூலம் காச நோய், எய்ட்ஸ் நோய் குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இந்த முகாம்களில் பொதுமக்கள் மேற்கண்ட நோய்கள் தொடா்பாகப் பரிசோதனை செய்து கொண்டு பயன்பெறலாம். அக்டோபா் 12-ஆம் தேதி வரை பிரசாரம் நடைபெறும் என ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாட்டு பிரிவு திட்ட மேலாளா் க.நாகராஜன், துறை சாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரு... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (ஆக.20) நடைபெறும் பகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வரும் ப... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 326 மனுக்கள் அளிப்பு

சிவகங்கை: சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 326 போ் மனு அளித்தனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் ந... மேலும் பார்க்க

பிள்ளையாா்பட்டியில் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றம்

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை காலை தொடங்கியது. சிவகங்கை மாவட்டம், பிள்ளை... மேலும் பார்க்க

தமிழ் சக்தி வாய்ந்த மொழி

காரைக்குடி: தமிழ் சக்தி வாய்ந்த மொழி; அதை ஒரு மாணவனாக நான் தினமும் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் திங்கள... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தல்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், இடையவலசையில் நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். இந்தக் கிராமத்தில் 274 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் அர... மேலும் பார்க்க