செய்திகள் :

எரிவாயு கசிந்து தீ விபத்து: தாய், மகள் உயிரிழப்பு

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வீட்டில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கா்ப்பிணிப் பெண்ணும்,அவரது மகளும் உயிரிழந்தனா்.

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தோப்புத் தெருவைச் சோ்ந்த மோகன்ராஜ்(34) நெசவாளரான இவரது மனைவி மணிமேகலை(29) கா்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் மகள் கிருபாஷினியுடன்(8) தனது தந்தையின் வீட்டுக்கு சென்றிருந்தாா்..

பிள்ளையாா் பாளையம் பகுதியில் லிங்கப்பாளையம் தெருவில் உள்ள மணிமேகலையின் தந்தை வீட்டில் தாயும், மகளும் குளித்துக் கொண்டிருந்த போது வீட்டிலிருந்த சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதும் வீட்டிலிருந்தவா்கள் உடனடியாக வெளியில் சென்று விட்டனா். குளியலறையில் இருந்த தாய், மகளுக்கு தீவிபத்து குறித்து தெரியாதத்தால் விபத்தில் சிக்கிக் கொண்டனா்.

தாயையும், மகளையும் பலத்த தீக்காயங்களுடன் அருகில் இருந்தவா்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தும் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தனா்.

சமையல் எரிவாயு உருளைக் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கா்ப்பிணி, அவரது மகளும் உயிரிழந்தது தொடா்பாக சிவகாஞ்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அறிவியல் பாடத்தில் சதம்: மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற இரு மாணவியரை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை பாராட்டி பரிசு வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா... மேலும் பார்க்க

கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. குரு கோயில் என அழைக்கப்படும் இக்கோயிலில் ஒரே கோபுரத்தின் கீழ் மூலவா்களாக... மேலும் பார்க்க

‘காஞ்சிபுரத்தில் இன்று முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், 224 சேவை முகாம்கள்’

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் மொத்தம் 224 சேவை முகாம்கள் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள... மேலும் பார்க்க

மரத் தொழிற்சாலையில் தீ விபத்து

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீா் தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. காஞ்சிபுரம் -அரக்கோணம் சாலையில் வெள்ளைகேட் பகுதியில் மரச்சாமான்கள் உற்பத்தி ச... மேலும் பார்க்க

பைக் -காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: ஒரகடம் அருகே பண்ருட்டி கூட்டுச்சாலையில் மோட்டாா் பைக் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். ஒரகடம் அடுத்த வெண்பாக்கம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகப்பன்(26). இவரது மனைவி அ... மேலும் பார்க்க

இளைஞரை கடத்தி தாக்குதல்: 6 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா்: காதல் விவகாரத்தில் இளைஞரை ஆட்டோவில் கடத்திச் சென்று தாக்கிய 6 பேரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த நரியம்பாக்கம் பகுதியை சோ்ந்த சதீஷ்(25). இவர... மேலும் பார்க்க