செய்திகள் :

எலான் மஸ்க்குடன் பெங்களூரு தொழில்முனைவோர் எடுத்த செல்ஃபி... இவ்வளவு கவனம் பெறுவது ஏன் தெரியுமா?

post image

பெங்களூருவைச் சேர்ந்த தொழில்முனைவோர் தீபக் கணகராஜு, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் உடன் செல்ஃபி எடுத்ததாக ஒரு புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டார். முதலில் இது ஒரு சாதாரண சந்திப்பின் புகைப்படம் போல் தோன்றினாலும், அவரது பதிவு நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ளது.

போலி செய்திகள் எவ்வளவு எளிதில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை அந்த பதிவு தெளிவுபடுத்தியது. தீபக் அந்த போஸ்ட்டின் கேப்ஷனில் “எலான் மஸ்க் உடன் ஒரு சாதாரண சந்திப்பு.” என்று பதிவிட்டிருக்கிறார்.

ஏஐயின் உண்மையான ஆபத்து, ரோபோக்களால் மனிதர்களின் வேலைகள் பறிபோவது மட்டுமல்ல, போலி செய்திகள் எவ்வளவு எளிதாகப் பரவுகிறது என்பதை சார்ந்தும் தான் இருக்கிறது.

AI

ஏன் இந்த பதிவு கவனத்தை ஈர்த்தது?

இந்த சந்திப்பு உண்மையில் நடக்கவில்லை, புகைப்படம் முழுவதும் AI-ஆல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெங்களூருவில் இருந்து ஒருவர் எலான் மஸ்குடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்பதே மக்களிடம் கவனம் பெற்றது, அதன் உண்மைதன்மையை பலரும் அறியவில்லை.

போலி அனுபவங்களை உருவாக்கும் AI

AI-ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் பிரபலமான நபர்களின் புகைப்படங்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. முற்றிலும் கற்பனையான இடங்கள் மற்றும் நிகழ்வுகளை உண்மையானவை போல் காட்சியளிக்கச் செய்கிறது. இதனால் மக்கள் இல்லாத இடங்களையோ நிகழ்வுகளையோ நம்பி பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஜூலை மாதம், மலேசியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், சமூக வலைதளத்தில் ஒரு அழகிய கேபிள் கார் பயணத்தின் வீடியோவைப் பார்த்து, கோலாலம்பூரிலிருந்து பேராக் வரை 370 கி.மீ. பயணம் செய்தனர். ஆனால் அவர்கள் அந்த இடத்திற்கு சென்றபோது அந்த இடம் உண்மையில் இல்லை என்பதைக் கண்டறிந்தனர். அவர்கள் பார்த்து வியந்த வீடியோ AI-ஆல் உருவாக்கப்பட்டது. இப்படி பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு நமக்கு பல வசதிகளை வழங்கினாலும், போலி செய்திகளை எளிதில் உருவாக்கி பரப்புவதற்கு அதிக வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீனில் விடுதலையான மும்பை தாதா அருண்காவ்லி.

மும்பையில் கொலை, மிரட்டி பணம் பறித்தல், ஆள் கடத்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தவர் அருண் காவ்லி. மும்பையில் தற்போது மாபியா கும்பல்கள் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் அருண் காவ்லி உட்பட ஒரு சில கிரிமி... மேலும் பார்க்க

சாக்லேட்டில் வடிவமைக்கப்பட்ட பிரதமர் மோடியின் சிற்பம்; 7 நாள்கள் உழைத்து தயாரித்த மாணவர்கள் குழு!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ( செப்டம்பர் 17) முன்னிட்டு ஒடிசாவை சேர்ந்த மாணவர்கள் அவரது உருவத்தை சாக்லேட்டில் வடிவமைத்து அசத்தியுள்ளனர். இதற்காக இவர்கள் 55 கிலோ டார்க் சாக்லேட் மற்றும் 15 கி... மேலும் பார்க்க

`வேலை, திருமண வாழ்வு வேண்டாம்..!' - கப்பலில் வாழ்ந்து வரும் பெண்; வருமானம் எப்படி வருகிறது தெரியுமா?

அமெரிக்காவை சேர்ந்த லின்னெல் என்பவர் Poverty to Paradise என்ற யூடியூப் சேனலை உருவாக்கி, தான் வாழும் கப்பல் அனுபவங்கள் குறித்து அதில் பதிவிட்டு வருகிறார். 2024 ஆம் ஆண்டில் அவர் பலவிதமான நெருக்கடிகளை சந... மேலும் பார்க்க

”விமானத்தில் ஏறுவதற்கு முன்பு என் சட்டையின்...”- விமான பணியாளர் மீது குற்றம்சாட்டும் பிரபல மாடல்

பிரபல மாடலான ஈவ் கேல், அமெரிக்கன் ஏர்லைன்ஸின் விமான பணியாளர் ஒருவர் தனது ஆடை குறித்து கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.ஈவ் க... மேலும் பார்க்க

முதல் மாத சம்பளத்தில் தந்தையின் கனவை நிறைவேற்றிய மகள் - நெகிழ்ந்த குடும்பத்தினர்!

வேலைக்கு சேர்ந்த பின்பு ஒரு பெண், தனது முதல் மாத சம்பளத்தை எடுத்து தந்தையின் கனவை நிறைவேற்றியுள்ளார்.நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட ஒரு பெண் தந்தையின் கனவை நினைவாக்கியுள்ளா... மேலும் பார்க்க

Passport: இணையவாசிகளிடையே கவனம் பெறும் நூற்றாண்டு பழைய பிரிட்டிஷ் இந்திய பாஸ்போர்ட்!

விமானத்தில் பயணிப்பதற்கு பாஸ்போர்ட் அவசியமான ஒன்றாக உள்ளது. முன்பெல்லாம் விமான போக்குவரத்து அரிதாக காணப்பட்ட நிலையில், தற்போது உள்நாடு, வெளிநாடு என பலரும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக விமானத்தில் பயண... மேலும் பார்க்க