செய்திகள் :

எல்லைகளில் ஊடுருவல் இல்லாத நிலையை எட்ட வேண்டும்: அமித் ஷா

post image

தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எல்லைகளில் ஊடுருவல் இல்லாத நிலையை எட்ட வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (பிப். 5) தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பாதுகாப்பு குறித்து தில்லியில் அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கவேண்டியிருந்ததால் இக்கூட்டத்தின் இடையில் அமித் ஷா வெளியேறினார். இதனால் கூட்டம் முழுமையாக நிறைவுப் பகுதியை எட்டவில்லை.

இக்கூட்டத்தில் தொடக்கத்தில் ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் அவரின் மனைவி மற்றும் மகள் படுகாயம் அடைந்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்புகளை மதிப்பிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், எல்லைகளில் ஊடுருவல்களை முற்றிலும் தடுக்கும் வகையில், பதில் தாக்குதல் நடவடிக்கைகள், வலுவான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாததை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியுடன் இருப்பதையும் மீண்டும் கூட்டத்தில் அமித் ஷா வலியுறுத்தினார்.

தீவிரவாதத்துக்கு எதிரான நமது போராட்டம் பூஜ்ஜிய ஊடுருவல் நிலையை எட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க | இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!

இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன்ஏஐ நிறுவனம் ஆலோசனை!

நாட்டின் சாலை வரைபடங்கள் குறித்து இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டார். மேலும், இந்த ஆலோசனையில் இந்திய சந்தைக்கான சேட்ஜிபிடி பற்றிய தயாரி... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகை ரூ.17 லட்சம் கையாடல்: பெண் காவலர் பணி இடைநீக்கம்

பனாஜி : கோவா காவல் துறையில் தலைமைக் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவர், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டோரிடருந்து வசூலிக்கப்பட்ட ரூ.17 லட்சம் பணத்தை கையாடல் செய்த குற்றத்துக்காக பணியிலி... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி மாறுகிறதா? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. மேலும் பார்க்க

இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!

இந்து சமய நடைமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நீக்கியுள்ளது. நீக்கப்பட்டவர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது அவர்கள் விரும்பினால் அரசின் பிற துறைகளில் பணி புரிய தேவஸ்தானம் தனத... மேலும் பார்க்க

அமெரிக்க ராணுவ விமானம் தரையிறங்க அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களுடன் அமெரிக்க ராணுவ விமானம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இன்று பகல் 2 மணிக்கு தரையிறங்கியது. ஆனால், தலைநகர் புது தில்லியில் இந்த விமானம் தரையிறங்காமல் அமிர்தசரஸ் தே... மேலும் பார்க்க

தில்லியில் வாக்குப்பதிவு நிறைவு!

தலைநகர் தில்லியில் மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.காலை மந்தமாக நடைபெற்றுவந்த வாக்குப் பதிவு, பிற்பகலில் அதிகரிக்கத் தொடங்கியதால், வாக்கு வி... மேலும் பார்க்க