செய்திகள் :

எல்லைகளில் ஊடுருவல் இல்லாத நிலையை எட்ட வேண்டும்: அமித் ஷா

post image

தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எல்லைகளில் ஊடுருவல் இல்லாத நிலையை எட்ட வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (பிப். 5) தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பாதுகாப்பு குறித்து தில்லியில் அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கவேண்டியிருந்ததால் இக்கூட்டத்தின் இடையில் அமித் ஷா வெளியேறினார். இதனால் கூட்டம் முழுமையாக நிறைவுப் பகுதியை எட்டவில்லை.

இக்கூட்டத்தில் தொடக்கத்தில் ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் அவரின் மனைவி மற்றும் மகள் படுகாயம் அடைந்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்புகளை மதிப்பிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், எல்லைகளில் ஊடுருவல்களை முற்றிலும் தடுக்கும் வகையில், பதில் தாக்குதல் நடவடிக்கைகள், வலுவான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாததை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியுடன் இருப்பதையும் மீண்டும் கூட்டத்தில் அமித் ஷா வலியுறுத்தினார்.

தீவிரவாதத்துக்கு எதிரான நமது போராட்டம் பூஜ்ஜிய ஊடுருவல் நிலையை எட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க | இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? மாணவர்களே எச்சரிக்கை

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.பொதுவாகவே பொதுத் தேர்வுகள் என்றாலே பதற்றமாகத்தான்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் கத்தக்கூடாது! தப்புவது எப்படி?

பொதுவாக விபத்துகளின்போதுதான் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாவார்கள். ஆனால், தற்போது சாலை விபத்துகளைப் போலவே கூட்ட நெரிசலும் அதிகரித்து, அதனால் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.அண்மையில், புஷ்பா வெளியான த... மேலும் பார்க்க

மகா கும்பமேளா 'மரண' கும்பமேளாவாக மாறிவிட்டது! - மமதா பானர்ஜி

பிரயாக் ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா, மரண கும்பமேளாவாக மாறிவிட்டது என கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன... மேலும் பார்க்க

யார் இந்த ஞானேஷ் குமார்? ஜம்மு - காஷ்மீர், அயோத்தி விவகாரங்களில் முக்கிய பங்காற்றியவர்...

புதிதாக நியமிக்கப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியுள்ளார்.தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்றுடன் ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி அரசு: கார்கே

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, இந்தியர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே... மேலும் பார்க்க

இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறுவது ஏன்?: நிதியமைச்சா் விளக்கம்

மும்பை: இந்தியாவில் முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதால் அந்நியமுதலீட்டு நிறுவனங்கள் (எஃப்ஐஐ) தங்கள் கைவசம் உள்ள பங்குகளை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றன என்ற நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரி... மேலும் பார்க்க