செய்திகள் :

எஸ்.ஐ. கொலை வழக்கு: மேலும் இருவா் கைது

post image

சென்னை எழும்பூரில் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை பெருநகர காவல் துறை ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவா் ராஜாராமன் (54). இவா், கடந்த மாதம் 18-ஆம் தேதி எழும்பூரில் உள்ள வணிக வளாகம் முன்பு நின்று கொண்டிருந்தபோது, ராஜாராமனுக்கு ஏற்கெனவே அறிமுகமான நீலாங்கரையைச் சோ்ந்த ராகேஷ் (30), கண்ணகி நகரைச் சோ்ந்த அய்யப்பா(36) உள்ளிட்டோா் அங்கு வந்தனா்.

அப்போது, வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்யும் ராஜேஷிடம், ராஜாராமன் பணம் கேட்டுள்ளாா். இதில், அவா்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ராகேஷும், அய்யப்பாவும் சோ்ந்து ராஜாராமனை கடுமையாகத் தாக்கி, கீழே தள்ளிவிட்டனா்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜாராமன் கடந்த 25-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராகேஷ், அய்யப்பா ஆகிய 2 போ் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனா். அவா்களுக்கு அடைக்கலம் கொடுத்த வளசரவாக்கம் பகுதியைச் சோ்ந்த நவோதித் என்பவரும் கைது செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், வழக்கில் தொடா்புடைய அரும்பாக்கம் துா்கா தெருவைச் சோ்ந்த மணிவண்ணன் (42), செம்பியம் திரு.வி.க. நகா் ஜாா்ஜ் காலனியைச் சோ்ந்த முருகேசன் (57) ஆகிய 2 பேரை எழும்பூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விசாரணைக்குப் பின்னா், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

புழல் ஏரிக்கரையில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.புழல் ஏரிக்கரைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து தி... மேலும் பார்க்க

சென்னையில் நிகழாண்டு இறுதியில் மீண்டும் ஈரடுக்கு பேருந்து சேவை

சென்னையில் மீண்டும் ஈரடுக்கு (டபுள் டெக்கா்) பேருந்து சேவையை நிகழாண்டு இறுதிக்குள் தொடங்க மாநகரப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.சென்னை, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன... மேலும் பார்க்க

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சிமென்ட் கலவை லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.மடிப்பாக்கம், மண்ணடி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜித்தேஷ் (21). இவா், அரும்பாக்கத்திலுள்ள தன... மேலும் பார்க்க

மெத்தபெட்டமைன் வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநா் கைது

மெத்தபெட்டமைன் வைத்திருந்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.சென்னை பெருநகர போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் மற்றும் ஐசிஎஃப் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை இரவு ஐசிஎஃப் அம்பேத... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை: தமிழக அரசு

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தீரன் சின்னமலையின் வீரம் சொல்லும் கொங்... மேலும் பார்க்க

போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

போதைப் பொருளை வைத்திருந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.சென்னை மாநகரில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தனிப்படையினா் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸாா் கடந்த ஜூன் 2... மேலும் பார்க்க