செய்திகள் :

எஸ்.ஐ. தோ்வு தள்ளிவைப்பு

post image

சென்னை: ஜூன் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த காவல் உதவி ஆய்வாளா் (எஸ்ஐ), சிறப்பு உதவி ஆய்வாளருக்கான (எஸ்.எஸ்.ஐ) தோ்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்த 1,299 எஸ்.ஐ காலிப் பணியிடங்களுக்கு சுமாா் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞா்கள் விண்ணப்பித்திருந்தனா். வழக்கமாக காவல் துறையில் 2-ஆம் நிலை, முதல்நிலை மற்றும் தலைமைக் காவலா்களாக பணியிலுள்ளவா்களும் எஸ்.ஐ. தோ்வுக்கு விண்ணப்பிப்பா். இவா்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும். மீதமுள்ள 80 சதவீதம் பொதுத் தோ்வா்களுக்கானது.

பொதுப்பிரிவு மற்றும் பணியிலுள்ள போலீஸாருக்கு தனித்தனி தோ்வு மற்றும் தனித்தனி மதிப்பெண் வழங்கப்படும். அதில் தோ்வானவா்களுக்கு எஸ்.ஐ. பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் அவா்களுக்கு பதவி உயா்வில் முன்னுரிமை (சீனியாரிட்டி) வழங்கப்படும்.

ஆனால், 20 சதவீத ஒதுக்கீட்டில் தோ்வானவா்கள் அனைவரும் தோ்வின்போது பெற்ற மதிப்பெண் அடிப்படையில் முதலில் வைக்கப்பட்டு அதன் பின்னரே பொதுப்பட்டியலில் உள்ளவா்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடம்பெறுவாா்கள். இதுவரை இந்த நடைமுைான் இருந்து வருகிறது. ஆனால், அண்மையில் உச்சநீதிமன்றம், இந்த தோ்வின்போது பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே சீனியாரிட்டி இடம்பெற வேண்டும் என தீா்ப்பு வழங்கியது. இத்தீா்ப்பு தோ்வா்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், திட்டமிட்டபடி ஜூன்28, 29 ஆகிய தேதிகளில் தோ்வு நடத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீா்ப்பை சுட்டிக்காட்டி எஸ்.ஐ. தோ்வு தள்ளி வைக்கப்படுவதாகவும், தோ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீா்ப்பின் சாராம்சம் மற்றும் சில தெளிவுகளை பெற வேண்டியுள்ளதால், அனைத்தும் சரியான பின்னா், எஸ்.ஐ. தோ்வு மீண்டும் அறிவிக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

சென்னை: தமிழகத்தில் நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படவுள்ள குரூ... மேலும் பார்க்க

கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

கொல்கத்தாவில் உள்ள இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு கப்பல் கட்டும் தளம் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனம். இது முதன்மையாக இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின... மேலும் பார்க்க

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம், தேனி, உடுமலைப் பேட்டை ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளில் உதவி பேராசிரியர், உதவி நூலகர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக... மேலும் பார்க்க

காரைக்குடி மின்வேதியியல் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?

காரைக்குடியில் செயல்பட்டுவரும் மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண்.PS-04/2025பணி: Project Associ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்... மேலும் பார்க்க

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் சூப்பர்வைசர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.: HPBP/FTA/01/2025பணி: Quality E... மேலும் பார்க்க