செய்திகள் :

ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டிய சரத் பவாருக்கு சிவசேனா எதிர்ப்பு!

post image

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டியதற்கு சிவசேனா புதன்கிழமை கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியது,

அமித் ஷாவின் உதவியுடன் சிவசேனாவை பிளவுபடுத்தியது ஷிண்டே தான், அவரைப் பாராட்டுவது பாஜக தலைவரை கௌரவிப்பதற்கு ஒப்பானது.

98-வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின்போது, ​​ஏக்நாத் ஷிண்டே தில்லியில் சரத் பவாரிடம் இருந்து மகாத்ஜி ஷிண்டே ராஷ்ட்ரீய கௌரவ் புரஸ்கார் விருதைப் பெற்றார். அடுத்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இலக்கியக் கூட்டத்தின் வரவேற்புக் குழுவிற்கு பவார் தலைமை தாங்குகிறார்.

2022ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா-என்சிபி ஆட்சியைக் கவிழ்த்ததால், சரத் பவார் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடாது என்று சஞ்சய் ராவுத் கூறினார்.

அரசியலில் சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். மகாராஷ்டிரத்தின் எதிரியாக நாங்கள் கருதும் ஒருவருக்கு இதுபோன்ற மரியாதை வழங்குவது மகாராஷ்டிராவின் பெருமைக்கு ஒரு அதிர்ச்சி. பவார் வித்தியாசமாக நினைத்திருக்க வேண்டும், ஆனால் அத்தகைய அரசியல் மகாராஷ்டிர மக்களுக்குப் பிடிக்கவில்லை.

நீங்கள் (சரத் பவார்) ஒரு மூத்த அரசியல்வாதி, நாங்கள் உங்களை மதிக்கிறோம். ஆனால், அமித் ஷாவின் உதவியுடன் பாலாசாகேப் தாக்கரேவின் சிவசேனாவைப் பிரித்து மகாராஷ்டிராவைப் பலவீனப்படுத்தியவர்கள், நீங்கள் அத்தகைய மக்களை மதிக்கிறீர்கள். இது மராத்திய மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

ராகிங் புகார்: முதலாமாண்டு மாணவர்களின் அந்தரங்க உறுப்புகளில் டம்ப்-பெல்ஸ் தொங்கவிட்டுக் கொடுமை! -கல்லூரி முதல்வர் விளக்கம்

கேரளத்தில் அரசு கல்லூரியில் மாணவர்கள் சிலர் ராகிங் கொடுமைப்படுத்துதலுக்குள்படுத்தப்பட்டுள்ளது பற்றி அக்கல்லூரியின் முதல்வர் விளக்கமளித்துள்ளார். கேரளத்தின் கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில்... மேலும் பார்க்க

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: முன்னாள் காங்கிரஸ் எம்.பி. குற்றவாளி என தீர்ப்பு!

சீக்கியர்களுக்கு எதிராக 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் இரட்டைக் கொலை வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்தை வெடிகுண்டு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை மிரட்டல் வந்துள்ளது.மேலும், அமெரிக்க பயங்கரவாதிகள் இந... மேலும் பார்க்க

சிசுவின் உடலைக் கடித்துத் தின்ற நாய்கள்: அரசு மருத்துவமனையில் அவலம்!

அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளங் குழந்தையின் உடலை நாய்கள் கடித்துக் குதறித் தின்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் லலித்பூரில் உள்ள மாவட்ட ... மேலும் பார்க்க

மாகி பௌர்ணமி: சங்கமத்தில் 1.60 கோடி பேர் புனித நீராடல்!

மாகி பௌர்ணமியை முன்னிட்டு பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கிட்டத்தட்ட 1.60 கோடி பேர் புனித நீராடியதாக மாநில அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைப... மேலும் பார்க்க

இலவசங்களால் மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை: உச்ச நீதிமன்றம்!

தேர்தலுக்கு முன்பு கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி அளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நகர்ப்புறங்களில் வீடற்றவர்கள் தங்குவதற்கான உரிமை தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள்... மேலும் பார்க்க